பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 -புதிய தெய்வம் தலைப் பேருரை தந்திட வந்தப் பண்பாட்டு அமைச்சரின் கெடிலாக் கும் நொறுங்கி கிடந்தது அங்கே. அவரையும் காணோம்! படத்துறை அதிபர், பேங்கர் மனைவி, இன்னும் அன்னிய தூத ரகத்துக் கன்னிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் அத்தனைப் பேர்களையும் மொத்தமாய்க் காணோம்! குத்துப் பட்டவர் தொகையும் அதிகம். அருளும் பண்பும் அழுது துடிக்க இருளில் புகையில் இரவு ஊர்ந்தது! துர்க்கைக் கோயிலில் சரஸி மட்டும் அர்ச்சகர் வராததினால் ஆயாசம் கொண்டாள்!