பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39-புதிய தெய்வம் . . . . . . . . . . . பெற்றவ ளுக்கில்லா பாபமும் தீட்டும் மற்றவருக் கில்லா மாசும் அழுக்கும் அறுபது எழுபது இலட்சங் களுள்ள வீடுகள் மனைகள் ஏராளம் உள்ள பேங்கர் மனைவிக்கு வந்து விட்டன! ஏங்கிய குழந்தை அழுதது! மீண்டும் 'கசமுசா வென்ற பேச்சு வலுத்தது! 'கசமாலம் பீடை' இதுஏன் இங்கே இப்போது வந்தது?" என்றெல்லாம் ஏச அப்படியே சரஸி அதிர்ந்து நின்றாள் கும்பிட வந்த கோயிலில் கூட வம்பிது வந்ததால் வெம்பினாள், நொந்தாள்!