உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

நஞ்சை வாங்கக்கூடிய அந்தஸ்து வந்தது, போய்விடலாம் என்று எண்ணம் வந்தது; அங்கு போய், ஏரும் எருதும் துணை யென்று, மறுபடியும் முழங்காலுக்கு மேலே துணியைக் கட்டிக்கொண்டு, முண்டாசு கட்டிக்கொண்டு, உழுது கொண்டு கிடக்கவேண்டியதுதானா, இனி ஏன் அந்தப் பிழைப்பு, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு, வேறு ஒரு 'டவுன்' போகலாம், அங்கு நல்ல வியாபாரம் ஆரம்பித்து, நாலுபேர் மதிக்கத்தக்க மனிதனாகலாம் என்று ஆசை பிறந்தது. இப்படி ஒவ்வோர் தடவை ஆசை பிறக்கும்போதும், வேலப்பன், தன்னுடன்தான் அழைத்துக் கொண்டு சென்றான். செல்லியை கற்பனை இரதத்தில் ! செல்லியை இவன் தாராசங்கம் தமயந்தியின் நேசம் ஏற்படுகிறவரையில் செல்லியை மறக்கவில்லை. தாராசங்கம் தமயந்தியுடன் தொழில் முறையிலேதான் அவனுக்கு முதலில் தொடர்பு ஏற்பட்டது. வாடிக்கையாக 'சரக்கு' வாங்கி வந்ததில் இருநூறு ரூபாய் அளவுக்குப் பாக்கி ஏறிவிட்டது—பணம் வருவதாகக் காணோம். மூலைக்கடை முத்தையன் இதற்குள் வேலப்பனை, 'எஜமான்’ ஆக்கிக்கொண்டிருந்தான்.

"எஜமான் சும்மாவிடக் கூடாதுங்கோ அவளை, ஆமா, பணத்தை எப்படியும் வாங்கியாகணும், நாங்க இவ்வளவு பேரு எதுக்கு இருக்கிறோம் உங்க உப்பைத் தின்னுவிட்டு, இந்த வேலை கூடச் செய்யாவிட்டா மனுஷ ஜென்மமா நாங்க. ஒரு உத்தரவு கொடுங்க, அவ வீட்டிலே பூந்து கலாட்டா செய்து பணத்தைக் கறந்துகிட்டு வந்து கொடுக்கிறோம்."

"முத்தையா! அவளை நீ கண்டதுண்டமா வெட்டிப் போட்டாக்கூட, பணம் கிடைக்காது. போவுதுபோ, வீட்டுத் தொலை. இனி 'சரக்கு' கொடுக்காதே, அவ்வளவு தான்."

"எஜமான். இது எனக்குப் பிடிக்கலே. நீங்களாப் பார்த்து எத்தனையோ தான தர்மம் செய்றிங்க, அதுசரி.

3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/34&oldid=1576218" இலிருந்து மீள்விக்கப்பட்டது