பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ié!

இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே இன்னமும் உயிர் வைத்துக் கொண்டிருப்பது இந்த அடிப்படையில்தான் சாத்தியம் என்று சொல்லலாம்.

"எழுத்து முதல் ஏட்டில் தந்த கவிதைகளைப் பார்த்து விட்டு, தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைஸ்வாமி. 'பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி ஆகியோரும் கவிதைகள் எழுத முற்பட்டார்கள்.

'கவி-வேதனே' என்ற வேணுகோபாலன் கவிதை 2-வது ஏட்டில் இடம் பெற்றுள்ளது. பிறகு 9, 11 ஏடுகளில் நோன் கவியானேன் வெள்ளம் எனும் கவிதைகள் வந்துள்ளன.

துரைஸ்வாமியின் கவிதைகள் (காத்த பான, கடன் பட்டார், சில) 3, 4, 5 ஏடுகளில் பிரசுரமாயின.

புதிதாகக் கவிதை எழுதியவர்களில் பேசுவய்யா" கவிதைகள் புதுமையும் தனித் தன்மையும் பெற்று விளங்கின. மூன்ருவது இதழில் வெளியான உன் கை நகம் குறிப்பிடத் தகுந்தது. -

நகத்தை வெட்டியெறி அழுக்குச் சேரும் நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும். அகிலமே சொந்தம் அழுக்குக்கு: நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு? "பிருண்டலாமே-எதிரியைப் பிருண்டலாமே?” பிருண்டலாம், பிடுங்கலாம், குத்தலாம், கிழிக்கலாம். ஆறத் தழுவிய அருமைக் கண்ணுளின் இடது தோளில் - ரத்தம் கசியும். வலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு. தூக்கி சுமக்கும் - - அருமைக் குழந்தையின்