பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36

பூமித் தோலில்

அழகுத் தேயில்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ.

இருளின் சிறகைத்

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி - தரும சிவராமுவின் கவிதையாற்றலின் வளர்ச்சியைக் கூறும் படைப்புகள் இவை. விடிவு, மாலே, நிழல்கள், சைத்ரீகன், மறைவு ஆகியவை கற்பனை நயத்தையும் சிந்தனைச் செறிவை யும் விளக்கும் கவிதைகள். -

எழுத்து"வின் மூன்று ஆண்டுகள் வளர்ச்சி குறித்து 36-வது இதழில் வந்துள்ள தலையங்கம் கவிதைகள் பற்றியும் பேசுகிறது- - -

எழுத்து'வில் சுமார் 90 கவிதைகள் வந்திருக்கின்றன.

எழுத்துவில் வெளியான கவிதைகள் பொருள் விளங்காத சொற்கள் பலவற்ருல் பிணைத்துக் கட்டப்பட்ட கரடுமுரடான கதம்ப மாலேகளாக உள்ளவை என்ற ஒரு வாசகர் கருத்தை புதுக்கவிதை பற்றி ஓங்கியடித்துச் சொல்லும் பாதகமான ஒரு அபிப்பிராயத்தின் பிரதிநிதித்துவக் குரலாக கருது கிருேம். இந்த இடத்தில் அதைப் பற்றி விவாதிக்க இடம் இல்லை, ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இந்த மாதிரிக் கருத்துக்கள் கிணற்றுத் தவளை வாழ்வில்ை: ஏற்படுவது. இலக்கியச் சிறப்பான உலகத்து பல்வேறு: மொழிகளிலும் தற்கால கவிதை நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர முடிந்தவர்கள் தான் இந்த புதுக்கவிதை வளர்ச்சியைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். அன்றைய. பாரதியையே கவியாக இன்னும் உணர முடியாத சூழ்நிலை gు இன்றைய புதுக்கவிதை சோதனைக்கார முதல்வன் பிச்சமூர்த்தியையும், எழுத்து மூலம் முளேவிட்டு. வளரும் இனம் கொழுந்துகளையும் புரிந்து கொள்ள, புதுக்கவிதை