பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i3i

களின் தன்மைகளை உணர கொஞ்சம் போக வேண்டும். எழுத்து மூன்று ஆண்டுகளாக, சலிக்கும்படி கேட்க ஏற்பட்ட இதுபோன்ற கருத்துக்களை கண்டு ஆத்திரப்படாது. இந்தி கருத்து மாறச் செய்யும் முயற்சியாக வழிவகைகளை ஆராய்ந்து செல்வது மூலம்தான் பாரதிக்குப் பின் இந்த புதுக்கவிதை பிறப்பு காலகட்டத்தை செழிப்பாக்க முடியும்.”

16. சாதனைகள் கிறைந்த வருஷம்

புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப் பிடப்பட வேண்டிய ஒரு கால கட்டம் ஆகும். அதை ச்ாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.

அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) எழுத்து' நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும்.

சமீபத்தில் எழுத்து வாசகர் ஒருவர் தன் கடிதத்தில் பின்வரும் வரிகளே எழுதி இருந்தார். .

"எழுத்து கவிதையில் காட்டி வரும் சாதனை நீங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாயிராது என நம்புகிறேன்.'

அவர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையில், புதுக்கவிதை 1959-ல் எழுத்துவில்தான் பிறந்தது என்று சொல்ல முற்படமாட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ந.பி.யும் கு.ப.ரா.வும் வல்லிக் கண்ணனும் பிறப்பித்துவிட்ட குழந்தை அது. ஆனல் 1959 முதல் இன்று வரைய நாட்களில் தான் இந்தப் புதுக்கவிதை இனம் கண்டுபிடிக்கப்பட்டு நாமகரணமும் இடப்பட்டது.

வசனத்தை முறித்துப் போட்டு எழுதுவது "விஜிடபிள் பிரியாணி', கோவேறு கழுதை யாப்பு தெரியாமல் ஏதோ கிறுக்கல்கள் என்றெல்லாம் கண்டவாறு பரிகாசத்துக்கு உள்ளாகி இருந்த ஒரு முயற்சிக்கு மதிப்பு கிடைத்துவிட்டது.