பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

துயிலுமுன் பரிதி தூக்கி யெறிந்த - ... •

வெள்ளே வெற்றிலக் காம்புகளே

ஆகாசத் துாசுக்கும்பல்

பொறுக்கி

மென்று:

உமிழ்ந்த

எச்சில். (எழுத்து 65)

கவிதையில் காலா:காலமாகக் கையாளப் பட்டு நைந்து போன விஷயத்துக்குக் கூடப் புதுமை சேர்க்க இயலுமா என்று புதுக் கவிதை சோதனை செய்யத் தயக்கவில்லை, நிலவு இம் முயற்சிக்கும் கை கொடுக்கிறது.

கிணற்றில் விழுந்த நிலவு’ என் எ ஸ், வைதீஸ்வரன் எழுதியதையும் நிலவை கற்பரசியாகக் கண்டும், நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் தி, சோ. வேணுகோபாலன் ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வேறு கோணங்களிலும் நிலவைப் பார்க்கிருர்கள் சிலர்.

விட்டெறிந்த இட்டலியோ கட்டிவைத்த பழஞ்சோருே கொட்டி விட்ட கப் தயிரோ சுட்டு வைத்த அப்பந் தானுே? என்ன இழவேயாளுதும் எட்ட இருந்து சிமிட்டுது கண் கிட்ட வந்து எட்டவில்லை பாடு பட்ட பாட்டாளி கொட்டாவி விடுகின்றேன்

உறக்கம் வருது பசிமறக்கும், இ. அண்ணுமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து 55-57) சி. மணி கானும் தோற்றம் மேறு ரகமானது.

நல்ல பெண்ணடி நீ!

முகத்திரை இழுத்துவிட இரண்டு வாரம்