பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i57

வாழ்வு நெறிக்க வெளுத்தது முடி

19. குறை கூறல்

க. நா. சுப்ரமண்யம் 1964ல் இலக்கிய வட்டம் என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண் டிருந்தார்.

அதன் 17வது இதழ் தமிழ் இலக்கியத்தில் சாதனையை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து, தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், தி. க. சிவ சங்கரன், ரதுலன், வெ. சாமிநாதன், ஆர். சூடாமணி, தெ. பொ. மீனுட்சிசுந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் அபிப்பிராயங்கள் அறிவித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

தி. க. சிவசங்கரன் பதினேழு ஆண்டில் இலக்கியம்' என்ற தலைப்பில், சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், நாடகம் என்று பகுத்து, விரிவாகத் தனது கருத்துக்களே அறிவித்திருந்தார். அதில் புதுக்கவிதை பற்றி அவர் கூறியது இங்கு எடுத்துச்சொல்லப் படவேண்டிய கருத்து ஆகும்- - - . ‘புதுக் கவிதை குறித்து என் கருத்து யாது?’ புதுமை, சோதனை என்ற முறையில் நான் புதுக் கவிதையை வரவேற்கிறேன்; திறந்த மனத்தோடு புதுக் கவிஞர்களின் படைப்புக்களைச் சுவைக்கிறேன்.

புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், கே. ராமநாதன் ஆகியோரின் புதுக் கவிதைகளே கலாமோகினி", "கிராமஊழியன்', 'சிவாஜி', "நவசக்தி ஆகிய இதழ்களில் அவை வெளிவந்த காலம் தொட்டு வாசித்து வருபவன் நான்.