பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io 4

மேலும் மேலும் பல புதுமைகளையும் சோதனைகளையும் வெற்றி கரமான சாதனைகளாக ஆக்கியிருக்கிருர், அவற்றில் முக்கியமான ஒருசிலவற்றை அவ்வப்போது நான் குறிப் பிட்டுமிருக்கிறேன். - -

1965ல் இவர், வரும் போகும் என்ற நெடுங் கவிதை யையும், 1966ல் ‘பச்சையம்’ எனும் நீண்ட கவிதையையும் படைத்துள்ளார்.

இவை போக சிறுசிறு கவிதைகளாக அநேகம் எழுதி யிருக்கிருள். கற்பனை வளம், கருத்து நயம், வளமான சொல் லாட்சி, புதுமைப்பார்வை முதலிய சின்னஞ்சிறு கவிதை களிலும் காணக் கிடக்கின்றன. லேசான பரிகாசமும் சில கவிதைகளில் தொனிக்கிறது.

நிலவைப் பற்றி இவர் எழுதிய கவிதை ஒன்றை முன்பு குறிப்பிட்டேன். நிலவுப் பெண்’ என்று இவர் இன்னுெரு கவிதையும் எழுதியுள்ளார். +

ஊடாத பெண்ணுெருத்தி உண்டென்ருல், ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி கருங்குழல் புரளும் புறம் காட்டாது கலமுக்க் காட்சி தந்தே கூடல் தீ வளர்க்கும் பெண்ணுெருத்தி உண்டென்ருல் நீயல்லவோ அப் பெண்! .

(எழுத்து-76) இன்றையப் பாரியையும் அவனுடைய ஈகைத் திறத்தையும் நயமாக அறிமுகம் செய்கிறது ஒரு கவிதை.

নি কক্ষ ।

பட்டமரம் போலச் சாய்ந்த சாலே இருபுறத்திலும் நடைபாதை நெடுகிலும் மனிதர் மறைந்து வாழ - பயன்படும் வளைகள் ஒன்றில் சாக்குத்திரை;