பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

முழக்கம் கேட்கிறது போன்ற கவிதைத் தலைப்புகள் சில உதாரணங்கள் ஆகும். -

ஒரு சிலர் ரத்தம், பிரவாகம், ரத்த ஓட்டம், செங்குருதி வெள்ளம் என்று முழக்கமிடுவதில் ஒரு வெறிவேக உவகை பெறுகிருர்கள் என்று தோன்றுகிறது.

“தாமரை கவிதைகளில், நவபாரதியின் இங்கே இடி முழக்கம் கேட்கிறது, பரிணுமனின் அகப்பை நோய்கள் "நாங்கள் அந்தரசாரிகள்', விடிவெள்ளியின் கடப்பை காந்தம்மா’, திருநாவுக்கரசின் ஓர் அருவியின் மரணம்' :இங்குமொரு பூ மலரும், பிரபஞ்ச கவியின் ஒரு மாண வனின் மரண விழாவின் போது’, சிற்பியின் சிகரங்கள் பொடியாகும் கோ. ராஜாராமின் ஒப்புதல் பாடங்கள் தேலைமுறைகள் ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை.

கோ. ராஜாராம் கவிதைக்கு விஷயங்களைத் தேர்ந்து கொள்வதில் தனித்தன்மை காட்டியிருக்கிருச்.

சார்வாகனின் சாணி பொறுக்கும் சிறுமி’யும், வண்ண நிலவனின் ரெயினிஸ், ஐயர் தெருக்காரர்களும் சா8ண பிடிப்பவனும், ஆகியவை ரசிக்கப்படவேண்டிய நல்ல கவிதைகள்.

"தாமரை”யில் பிரசுரமான கவிஞர்களின் சொந்தப் படைப்புகளைவிட, மொழி பெர்ப்புக் கவிதைகள் நயங்கள் மிகுதியும் கருத்தாழமும் கொண்டிருக்கின்றன. சிறியன வாகவம் உள்ளன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வலிமையுள்ள கவிதைகள் எழுதத் தமிழ் நாட்டு முற்போக்குக் கவிஞர்களும் தேர்ச்சி பெற்ருல் நல்லது . -

உதாரணத்துக்கு இரண்டு கவிதைகளே இங்கே தரு கிறேன். - -

முதற் படைப்பு'-ரசூல் கம்சதோவ் எனும் ரஷ்யக் கவிஞர் எழுதியது. தமிழாக்கம்: சிற்பி.

இந்தியாவில் கடவுள் படைத்த ஆதி உயிர்