பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73%

1945-ல் ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள் எழுதாமல் புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பதைக் குறை கூறி, இலக்கிய ரசிகர் ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி அவருக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்த ரசிகருக்கு ந. பி. எழுதிய பதில் கருத்தில் கொள்ளத் தக்கது.

11.8-1945 தேதியிட்டு செட்டிகுளத்திலிருந்து பிச்ச மூர்த்தி எழுதிய அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதி இது:

'கவிதையைப் பற்றி நான் சில திட்டவட்டமான கருத் துக்கள் உடையவன். கருத்தாழமோ உணர்ச்சியோ இயற் கையின் தரிசனமோ இல்லாத ஓசைப் பந்தலைக் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத்துத் தமிழ்க்கவிகள் கற்றுவிட்டார் கள். அதன் விளைவாக ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவிவிட்டது. இக் கொள்கைக்கு என் கவிதை மறுப்பு.

பழைய ஓசை இன்பக் கவி மரபை மறந்துவிட்டுக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழை அரசி, தீ என்ற தாயும் குஞ்சும், உயிர் மகள், ஒளியும் இருளும் மாகவிகள் முதலியவற்றைப் படித்திருக்கிறீர்களா?

இம்மாதிரி கவிதை புது முயற்சியானதால் பழைய யாப்பு முறையை அனுபவித்த காதுகளுக்கு இது பிடிக் காமல் இருக்கலாம். ஆனல் யுகம் மாறிவிட்டதென்ற உண்மையை காதுக்குச் சொல்ல வேண்டும். கவிதை இனி காதுக்கு மட்டுமல்ல. அச்சு இயந்திரத்திற்குப் பிறகு கவிதையில் கண்ணுக்கும் முக்கிய இடமுண்டு. உரை நடைக் கவிதை இதை நன்ருய் உணருகிறது.

சிறுகதைகள் எழுதிய காலத்தில் தலையுமில்லாமல் காலுமில்லாமல் இதென்ன என்று சொன்னவர்கள் அநேகர்,

சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சில காலம்

சென்றதோ, அதே போல இப் புது கவிதையையும் ரசிக்க சில காலம் போகவேண்டி இருக்கலாம். திறந்த மனத்துடன் ஈடுபட்டால் கவிதையைக் காணலாம். ஒசையுடன் கூடக் காணலாம்,