உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102 புதுமைப்பித்தன் கதைகள் "சிட்டுக்குருவிலேகியம் சாப்பிடும்; உடம்புக்கு நல்லது! "மறுபடியும் மறுபடியம் இப்படிச் சொல்லுகிறீரே! நான் சைவனாகித்தான் குடலே பலவீனமாகிவிட்டதே! வேறெ ஏதாவது மூலிகைச் சத்து இருந்தாச் சொல்லும்!" "அப்படியானால் ஜஸ்டிஸ் சோமேசத்திடம் கேட்டுச் சொல்லுகிறேன். எனக்கு நேரமும் ஆகிறது" என்று சொல்லி எழுந்தேன். .. நான் வேண்டுமானால் வழிகாண்பிக்கிறேன் வாரும்!' என்று எழுந்தது வேதாளம். "துப்பாக்கியை எடுக்கவேண்டுமே!" என்றேன். "உமக்கு ஞாபகப் பிசகு அதிகமோ! தண்ணீரில் கால் பட்டாலே எனக்கு வாத ஜூரம் கண்டுவிடுமே! இருந்தா லும் நீர் நல்லவராக இருக்கிறீர். உமக்காக என்று தண்ணீருக்குள் அந்தரடித்து, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்தது. 35 கரையில் அதற்கு நிற்கக்கூடச் சக்தியில்லை. ஓட்டைப் பல்லும், கைகால்களும் வெடவெடென்று ஆடின. என் மேல் வேஷ்டியைக் கொடுத்துப் போர்த்திக்கொள்ளும்படி சொன்னேன். போகும் வழியில், அந்தக் காலத்து எப்படி?" என்று பேச்சுக்கொடுத்தேன். வளமுறை . முன்னே சென்ற வேதாளம். நின்று திரும்பி, எனக்கு ராமன் கிருஷ்ணன் எல்லாரையும் தெரியும். அவாள்கூடப் பயந்துண்டுதான் இருந்தா. எனக்கு அவா ளைச் சின்னப் பையனாக இருக்கும்போதே தெரியும். அவாள் எல்லாம் தைரியசாலிகள்தான். ராக்ஷஸன் என் றால் தொம்சம் பண்ணிடுவாள். ஆனால் எங்களைக் கண்டா எப்போதுமே நல்லதனமாப் பயப்படுவா. அந்தக் காலத்து மனுஷாள்தான் என்னங்கிறீர்? தைரியத்திலே அசகாய சூரர்கள்தான். ஆனால். அவாளுக்கு மட்டு மரியாதை எல்லாம் தெரியும். முன்னோர்கள் சொன்னபடி, தெய்வம். பேய் பிசாசு, பூசாரி என்றால் ஒழுங்காகப் பயப்படுவாள். உங்கள் சுந்தரமூர்த்தி நாயனார்தான் என்ன. அவரைக் .