உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

I8 புதுமைப்பித்தன் கதைகள் இறங்கியவுடன் பக்கத்தில் நின்றவர்களை விசாரித் தான். அவர்கள் சிரித்துக்கொண்டு பங்களாவின் பக்கத்தி லிருக்கும் குடிசையைக் காட்டினார்கள். அவன் நேரே நடக்கும்பொழுது, மங்கிய வெளிச்சத்தில், துரையும் எதிரே, அந்த துரைசாணியுமாக சிரித்துப் இருவர் இடையில் கைபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டு சென்றார்கள். . அவனுக்கு மருதியின் நினைவு பொங்கியது. குடிசையை யடைந்து கதவைத் தட்டினான். உள் ளிருந்து ஈன ஸ்வரத்தில், "யாரது?" என்று குரல் கேட்டது, மனமுடைந்த குரல்: வெள்ளையனுக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை. மருதியா?" என்று கதவைத் திறந்தான். கருங் கம்பளியில் மருதி படுத்திருந்தாள். பக்கத்தில் குழந்தை படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடத்தில் தகர விளக்கு புகைவிட்டுக்கொண் டிருந்தது. என்று வெள்ளையன் திடுக்கிட்டான். மருதி பேய் பயந்தாள். பேயாக இருந்தாலும் புருஷனின் பேய் என்று பட்டதால், எழுந்து உட்கார்ந்து, "வெள்ளையனா?" என்றாள் வெள்ளையன் தான்! அவளைக் கையைப் பிடிக்கப் போனான். "என்னைத் தொடாதே! மேலெல்லாம் பாத்தியா?" என்று முதுகையும் கைகளையும் காட்டினாள். மேலெல்லாம் பறங்கிப் புண். வெள்ளையனுக்கு நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடிப் பதுபோல் இருந்தது. "இங்கே இதுதான் வளமொறை!" 5 வெள்ளையன் பதில் பேசவில்லை.அவன், இங் கிருந்து புறப்படவேண்டும்!" என்றான். அவள், "என்னால் வர முடியாது, குழந்தையைக் கொண்டுபோ!" என்றாள்.