உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

துன்பக் கேணி 27: உட்கார்ந்து கொண்டிருக்க, அவர்கள் என்ன ஜமீன்தார் களா? அல்லது அவர்களுக்கு வயிறில்லையா? வெளியே. எதிரே நின்று ஒரு நாய் குரைத்தது. திடீரென்று குடிசைக்குள்ளிருந்து ஒரு குழந்தையின் கதறல், பொத்துப் பொத்தென்று விழும் அடியின் சப்தம்! அதற்குமேல், 'கஞ்சிப் பானையெ கவுத்துப்புட்டியே, மூதி/ என்னெத்த குடிப்பெ! உங்கப்பன் வந்தான்னா மண்ணையா திம்பான்? அந்தத் தட்டுவாணி முண்டையோடெ தொலை யாமெ... சவமே, சவமே..." என்ற ஒரு பெண்ணின் கோபச் சொற்கள். மருதிக்கு உதரம் கொதித்தது. உள்ளே பாய்ந்து சென்றாள்.அடிபட்டுக் கொண்டிருக்கும் குழந்தையை அப் படியே கையில் வாரியெடுத்துக்கொண்டு,அடித்துக் கொண் டிருந்தவளைக் கன்னத்தில் ஓங்கி யடித்தாள். எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஒரு புதிய ஆள், வீட்டிற்குள் வந்து, ஒருவரை அடித்தால், யாராவது சும்மா இருப்பார்களா? . சண்டை ஏக தடபுடலாக ஆரம்பித்தது. ஒருவரை யொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். மருதிக்கு முகத்திலும் மார்பிலும் இரத்தம் கண்டது. இவர்கள் கூக்குரலைக் கண்டதும் குழந்தையும் வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சேரிப் கூடினார்கள். பெண்கள் பாதிப் பேர் மருதியின் கட்சி, சிலர் வெள்ளையன் இரண்டாவது மனைவியின் காட்சி. ஆனால், இன்னும் ஒருவரும் மருதியை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மருதியும், தன்னை யார் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. அந்நிய வீட்டிற்குள் புகுந்து யாராவது அடிக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? சேரியின் ஏச்சும் உதை யும் அவளுக்குக் கிடைத்தன. மருதி துரத்தப்பட்டாள். அன்று சாயங்காலம் குழந்தை வெள்ளைச்சியை வீட்டில் காணவில்லை.