உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 புதுமைப்பித்தன் கதைகள் என்றும் உதையும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிற குழந்தை, பொரிகடலையும் தின்பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால், உடன் வருவதற்குச் சம்மதியாமலா இருக்கும்? மருதி குழந்தையுடன் பாளையங்கோட்டைக்கு வரும் பொழுது இரவு ஒன்பது மணி பாளையங்கோட்டையில் இருந்தால் தொடர்ந்து வந்து பிடித்துவிடுவார்களோ என்ற பயம் அவளுக்குண்டு. . இரவில் நேராக ரயிலடியில் சென்று படுத்துக்கொண் டாள். எங்காவது வெகு தூரத்தில் போய்விட வேண்டும்- இவர்கள் இருக்கும் இடத்திற்கு வெகு தூரத்திற்கப்பால்! மருதிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று யார் முடியும்? கூற ரயில் ஸ்டேஷனில் கங்காணிச் சுப்பனைச் சந்தித்தாள். அவன் இடுப்பில் வெள்ளி அரைஞாணும், வெள்ளை வேட்டியுமாகத் தடபுடலாக இருந்தான். 'ஏட்டி,மருதி! நீ எங்கெ போறே?" என்றான். பிறகு என்ன! கங்காணிச் சுப்பன் 'வாட்டர் பால'த் திற்குப் போகிறானாம். இவளையும் கூப்பிட்டான், 'சரி' யென்று உடன்பட்டாள். இந்தப் புள்ளெ யாரு?" என்னுது?" சவத்தெ அங்கெ ஏன் கொண்டாரே?" அது செத்தாலும் என் கிட்டத்தான் சாகணும்!" X பதிநான்கு வருஷங்கள் கழிந்தன. கங்காணிச் சுப்பனுடன் சென்ற மருதி இத்தனை காலமும் வாட்டர் பாலத்திலேயே கழித்து விட்டாள். அங்கு இப்பொழுது மருதியின் ஸ்தானம் தேயிலைக் கூலி