உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 புதுமைப்பித்தன் கதைகள் "கட்டையா, கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்தா !ஆமாம், பாக்கும் இல்லே போலிருக்கு;எல்லாமா ஒரு துட்டுக்கு வாங்கியா!" என்றார் கணக்குத் தீத்தாரப்ப முதலியார். "ஆமாம், அவுக கேக்கதை வாங்கியாந்திட்டு, வெள்ளை யனைப் பாத்து இளுத்தா? அவன் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான். நாளெ விடியன்னைக்கிக் கச்சேரிக்குப் போகணும், யாவுகம் இருக்கா?" என்று சொல்லிக் கொண்டே குறிப்பிலிருந்தவற்றைத் தாக்கல் பண்ணிக் கொண்டிருந்தார் கி.மு.பிள்ளை. அப்பொழுது, மேலெல்லாம் பயிரின் புழுதி படிந்து, கக்கத்தில் ஒரு குடையை இடுக்கியவண்ணம், பின்புறம் இரண்டு,மூன்று மறவர்கள் கைகட்டி அவருடைய பேச் சைக் கேட்டுவர, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டு, பண் ணைப் பிள்ளை வந்து, "அப்பாடா!" என்ற வண்ணம் சவுக் கையில் உட்கார்ந்தார். வாருங்க அண்ணாச்சி! மேனி எப்படிக் கண்டது?" என்றார் கி.மு. 'மேனியாவது, எளவாவது! சவத்தைத் தள்ளுங்க. ஏலே ஆண்டி, வீட்டுக்கு என்ன வேணுமென்று பார்த்துக் கிட்டு வா!" என்று ஒருவனை அனுப்பினார். 'என்ன அண்ணாச்சி ஆலடியிலே அறுப்பெத் தொடங் கிட்டிய போல இருக்கெ-- இரு சவமெ, அண்ணாச்சிகிட்ட பேசுதது தெரியல்ல - வர வர பறக்களுதைகளுக்கும் திமிறு ஏறுது!" என்று எதிரில் இருந்த பறைச் சிறுமியை அதட்டிக்கொண்டு, பண்ணையாரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் ஓட்டப்பிடாரம் பிள்ளை. "ஆமாம், ஒண்ணுக்கும் குறைவில்லை,எல்லாம் ஒரு தொல்லைதான். போன திங்கக்கிழமை கோடு (கோர்ட்டு)க் குப் போயிருந்தேன். கப்பலரிசி வந்து மூடை மூடையாகக் குவியுதாம். பேட்டைப் பிள்ளை சொன்னார். இங்கையா, மண்ணோடு முட்டினாலும் ஒண்ணுமில்லை.அங்கெ நிக்கது மருதியா- ஏ மூதி! தொளுவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டு விட்டு வா!" என்று அதிகாரம்