உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

பண்ணிவிட்டு, துன்பக் கேணி "பிள்ளையவாள், ஆண்டி வந்தான்னா நந்தவனத்துக்கு வரச் சொன்னேன் என்று சொல் லுங்கள். என்று குறுக்குப் பாதையாக அங்கு சென்றார். 34 ஏட்டி,ஒம் புருசன் என்னமோ பணங் குடுக்கணும் என்று சொல்லுதாகளே, அதுக்குப் பண்ணையாரு கோவிச் சாகளாக்கும்; இருந்தாலும் ஊரு பெரியவுகளை பகைச் சுக்கிடலாமாட்டி!" என்று மருதியிடம் பேச்சுக் கொடுத் தார் கடைக்காரர். "என்ன சாமி, எம் பள்ளன் பண்ணை யெசெமாங் கிட்டே என்னமோ ஒரு ரெண்டு நூறு வாங்கிருக்காஞ் சாமி. ஊருக்குப் பெரிய நாயம்மாரே இப்படிப் படுத்துனா, நாங்க என்ன செய்வோஞ் சாமி? அதுலெ ரெண்டு காளை யும் வண்டியும் வாங்கினா. இப்பொ அதுவும்.- அந்தச் சொடலைதான் பாக்கணும்! - இவிய இப்படி உருக்கினா. பணத்துக்கு எங்கே போக? சாமி, இம்பிட்டு கருப்பட்டிப் போயிலையும் சருகும் குடுங்க சாமி, தொளுவெப் பார்த்துக் கிட்டு வாரேன்!" என்று அவளுக்குத் தெரிந்ததைப் புலம் பிக்கொண்டு, மாட்டுத் தொழுவத்தின் பக்கம் சென்றாள் மருதி. II மருதியின் புருஷன் பண்ணைப் பிள்ளையிடம் கடன் வாங்கும் பொழுது, நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடு வோம்' என்ற நம்பிக்கை யிருந்துதான் வாங்கினான் என்று நினைக்கமுடியாது. கொஞ்ச நாட்கள் மாட்டை உபயோகித் துக்கொண்டு, அது நோஞ்சானாகும் சமயத்தில், பண்ணை எஜமானின் காலைப் பிடித்துப் பணமாகக் கடனைக் கொடுக் காமலிருந்துவிடலாம் என்ற யோசனையின் பேரில் தான் நடத்தியிருக்க வேண்டும். பண்ணை எஜமான் இவனுடைய கூழைக் கும்பிடுகளுக்கெல்லாம் மசிகிற பேர்வழியாகக் காணப்படவில்லை. மேலும் அவர் தான் என்ன செய்வார்? எங்கு பார்த்தாலும் பண முடை; தீர்வைக்குக்கூடக் கட்டிவராது போலிருக்கிறது. நிலத்தில் ஜெண்டாவை நட்டுவிடாமலிருக்க, மசிகிற பேர்வழிகளிடத்தில், சிறிது