பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புதுமைப்பித்தன் மாதிரி இரண்டு கவளம் சாப்பிடுவார்; இருந்தாலும் சுசி ருசியாக இருக்க வேண்டும் என எண்ணுவார். இதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றால், நல்ல சாப்பாடோ நல்ல பகல்காரமோ' எங்கு கிடைக்குமோ, அந்த இடம் வெகு காரத்திலிருந்தாலும், அங்கு சென்றுதான் சாப்பிடு வார், காப்பி சாப்பிடுவதற்கு மட்டும் நேரம் காலம் என்று எதுவும் அவருக்குக் கிடையாது. ஆனால், அதற் கrகக் காரட் இடத்திலும் காப்பி சாப்பிட்டு விட மாட் டார். * இங்கேயா காப்பி சாப்பிடுவது?: இங்கே கழ நித் தண்ணியையில்லா கொதிக்க வச்சுக் குடுப்பான்?' என் பரர், நல்ல காப்பி, காப்பியின் சுயம்புவாள மணம் கம ழும் காப்பியைத்தான், அதுவும் சர்க்கரை அதிகம் சேராது “ஸ்ஸ்ட்ராங்'காக இருந்தால்தான் சாப்பிடுவார். வெற்றிலை போடும் பழக்கம் அவரை இளமையிலேயே பிடித்துக் கொண்டது. வெற்றிலையைத் தவிர எப்போ தாவது சிகரெட்டோ, நல்ல உயர்ந்த ரகச் சுருட்டோ குடிப்பார். சிகரெட் குடிப்பதில் அவருக்கு அதிகப்படி மான பழக்கமோ ரசிப்போ இருந்ததாகச் சொல்ல முடி யாது. இருந்தாலும் நல்ல உயர்ந்த ரகமான சிகரெட்டுக் களையே பிடிப்பார். ஒரு தடவை நான் அவரிடம் 999 என் ஓம் சிகரெட் பிராட்வேயில் ஒரு சுடையில் இருந்தது என்று கடறிவிட்டேன். அது மிகவும் உயர்ந்த ரக சிகரெட், புதுமைப்பித்தன்' 'அப்படியா?' என்று வியந்துபோய், உடனே நான் குறிப்பிட்ட கடைக்கு ஒரு பையனை டிராம் சார்ஜ் கொடுத்து அனுப்பினார். போனவன் அந்தக் கடை வில் ஒரே ஒரு சிகரெட்தான் இருந்தது என்று அதை வாங் கிக் கொண்டு வந்து சேர்ந்தான், அந்த சிகரெட்டையும் அவர் குடிக்கவில்லை,' 'பாவம், 'நீ ஏமாந்து போவா ! * என்று என்னிடம் தள்ளி விட்டுவிட்டார்!' சிகரெட் குடிப் பது அவருக்கு விலக்க முடியாத பழக்கமும் அல்ல; நித்ய ககுமமும் அல்ல. ஆனால் வெற்றிலை போடுவது மட்டும் அவரைப் பற்றிப் பிடித்துவிட்ட தீராத பழக்கம். புதுமைப்பித்தனின் 'கருச் சிதைவு' என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா? அதில் வரும் சுந்தரம் பிள்ளையைப் பற்றிப் புதுமைப்பித்தன் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: அனுப்பினா" : "தது என்ன தெரெட்ல