பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 புதுமைப்பித்தன் புதுமைப்பித்தனிடம் சொந்தத்தில் படம் எடுக்கும். தன்மையில் கையில் பணம் இல்லை; திடீரென அப்படி ஒரு தன்மை வந்து குதிக்கப் போகிறது என்ற அசட்டு நம்பிக்கைக்கும்கூட, இடம் இல்லை, இத்தனைக்கும் மேலாக, ஐந்து ரூபாய் விலை சொல்லும் ஒரு சாமானைப் பேரம் பேசி நியாயமான விலைக்குக்கூட வாங்கத் தெரி யாத புதுமைப்பித்தன், ஐந்து லட்ச ரூபாய் வியாபாரத் தில்' இறங்சுப் போகிறார் என்று தெரிந்து கொள்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்ல; பரிதாபத்துக்கும் அனு தாபத்துக்கும் உரிய சங்கதி. பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் என்ற விஷப். பரி சோதனையின் . ஜன்ம ரகசியத்தையோ, அந்தரங்கங் களையோ நான் அன்றும் அறியவில்லை; இன்றும் அறிய வில்லை, புதுமைப்பித்தனோடு நெருங்கிப் பழகிய இலக்கிய நண்பர்களான? கி. ரா., லோக நாதன் முதலியவர்களுக்கும் கூடத் தெரியாது. - புதுமைப்பித்தன் இந்த விஷயங்களை மறைத்தது அவரது சொந்த விருப்பினாலா, அல்லது தூண்டுதலினாலா என்பதும் எங்களுக்கெல்லாம் தெரியாது, சாக்கடை யாகட்டும், சாம்பிராணி யாகட்டும், அது எங் கிருக்கிறது என்பது தெரியாமல் போனாலும் அதன் நாற் றத்தையோ வாசனையையோ பூட்டி வைத்துவிட முடியாது. மற்றவர்களின் புலனுணர்ச்சியை அது - தொடத்தான் செய்யும். புதுமைப்பித்தன் தமது அந்தரங்க முயற்சி என்று செல்லி வந்த பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸின் போக்கு எங்கள் போன்றவர்களுக்கு ஓரளவு புரிந்தே வந்தது. சினிமாத் துறையில் நடிகராகவோ, காமிரா நிபுண ராகவோ, வசன கர்த்தாவாகவோ புகுந்து விட்ட ஆசாமி களில் சிலருக்கு சொந்தத்தில் ஒரு படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை - திடீரென எழுவதுண்டு. அந்த". ஆசை கலையின் மீதுள்ள '. ஆர்வமாகவும் இருக்கலாம்; காசின் மீதுள்ள காதலாகவும் இருக்கலாம். - இப்படித் தோன்றுகின்ற ஆசை சிலருக்கு, இஷ்ட பூர்த்தியாகவும், சிலருக்கு நிராசையாகவும், சிலருக்கு நப்பாசையாகவும் பிற்காலத்தில் மாறிவிடுவதுண்டு. • புதுமைப்பித்தனின் சினிமா உலகப் பிரவேசத்தால் அவருக்குச் சில கத்துக்