பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163|முருகுசுந்தரம் திருக்கும்; பின் விளைவுகளைப்பற்றியும் சிந்திக்க மாட் டார்கள். உணர்ச்சி வயப்பட்ட அவர்கள் நடவடிக்கை யால் அவரோடு தொடர்பு கொண்டவர்களும் பல சங்கடங்களுக்கு ஆட்பட நேரிடும். தம்வாழ்வில்ஏற்பட்ட இத்தகைய சங்கடம் ஒன்றை, அந்த இளைஞர் குறிப் பிட்டார்: -

  • பாவேந்தர் சேலத்தில் இருந்தபோது அவரை அடிக் கடி நான் காணச் செல்வதுண்டு. செர்ரி ரோட்டிலுள்ள "மாடர்ன் கேஃபில் அறையெடுத்துத் தங்கியிருப்பார். சிலசமயங்களில் சீரங்க பாளையத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ரிஹர்சல் ஹால் கட்டிடத்தில் தங்கி யிருப்பார். அவர்மீது எனக்குஅளவுகடந்தபற்று உண்டு. அவரைப் போய்ப்பார்ப்பதும், பேசுவதும்எனக்கு இனிய பொழுது போக்காக இருந்தது.

அப்போது என் சொந்த உபயோகத்துக்கு ஓர் அழகான குதிரை வண்டி வைத்திருந்தேன். குதிரையும் நல்ல ஜாதிக்குதிரை. அந்த நாளில் குதிரைவண்டி வைத் திருப்பது ஒருல்கை ந்ாக்ரிகம். பா 蠶 நான் செல் லும் போதெல்ல்ாம் த்தின்ரக்ய மிகவும் விருப்பத்தோடு பார்ப்பார்; அன்போடு தடவிக் கொடுப்பார். ஒருநாள் அவர் என்னைப்பார்த்து ராஜகோபால் இந்தக் குதிரை எனக்கு வேண்டும். வண்டியை விற்றுவிடு. குதி ஆ (3 :::::* நான் 蠶 கொள்கிறேன்" சின்று சொன்னுச். எனக் ள்றும் புரிய வில்லை. :: வாங்கி : செய் வார்? நான் பல முறை சிந்தித்தேன். சரி பாவேந்தர் క్ట్రలో நாம் எப்படி மறுத்துரைப்பது?’ என்று நின்ைத் தன். அவர் சொன்னபடி முதலில் வண்டியை விற்றுவிட்டேன். திரையைமட்டும் வீட்டில் கட்டித்தீனி போட்டுக் காண்டிருந்தேன்.பாவேந்தரிடம் சென்று' 'வண்டியை விற்று விட்டேன் குதிரையை உங்களுக்குக் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டேன். "குதிரையா? எனக்கெதற்கு குதிரை?’ என்று கூறி விட்டார் .