பக்கம்:புது மெருகு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

புது மெருகு

நெடுஞ் சுவர்

வேலியின் வீட்டுச் சுவரில் ஒரு பேய் இருந்து, எடுக்க எடுக்கக் குலைத்துக்கொண்டு வந்ததென்றும், கம்பர் பாடி அதனை ஓட்டிச் சுவரை எடுத்து கூலி பெற்றாரென்றும் விநோதரஸ மஞ்சரி கூறும் வரலாறு இங்கே இயற்கைக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டிருக்கிறது.

சம்பந்தச் சர்க்கரை:

கொங்குமண்டல சதகத்தில் உள்ள பின்வரும் பாடல் இச்சரித்திரத்திற்கு ஆதாரம்.

சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கை யிலாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்
மங்கலி யந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே. (66)

வாணன் உரைத்திட மால்ராமப் பையன் மனமகிழ்ந்து
வேணது கேளெனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்
வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலும்
தாணுவென் றிம்முடிக் காணிக்கைச் சாசனம் தந்தனரே

என்பது ஒரு தனிப்பாடல்; இச்சதகப் பதிப்பாசிரியர் ஸ்ரீ தி.அ.முத்துச்சாமிக் கோனார் மேற்கோள் காட்டியது.

பூங்கோதை:

அம்புவி மெச்சுகுன் றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர்
எம்பெரு மானைக் கொடுதக்கை என்னும் இசைத்தமிழால்
நம்பும் இராம கதையைஅன் பாக நவிலஇசை
வம்பவிழ் தார்ப்புயன் நல்லய னுங்கொங்கு மண்டலமே.
குறுமுனி நேர்தமிழ் ஆழியுண் வாணர் குழாம்வியப்ப
அறிவில் இளைஞரே ஆண்மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய இடைச்சிஎம் பெருமான் மனைவி சிறந்துவளர்
மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே.
                  —கொங்கு மண்டல சதகம், 63,64.

கற்பூர நாயக்கர்:

இது நாடோடியாக வழங்கி வரும் கதை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/133&oldid=1549660" இலிருந்து மீள்விக்கப்பட்டது