பக்கம்:புது வெளிச்சம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"அவித்தையில் வெகுவாக ஆழ்ந்தவர்களும் அறிவிற் சிறியோருமாகிய இவர்கள் தம்மை கிருதார்த்தர்களாக மதித்துக் கொள்கின்றனர். ஆசைவயப்பட்டமையால் காமிய கருமத்தில் பற்றுள்ளவர்கள் உண்மையை உணர்வதில்லை. அக்காரணத்தால் துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களாய், அழியும் சுவர்காதி உலகங்களை அடைந்து மீண்டும் அங்கிருந்து கீழே நழுவுகின்றனர்".

இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும் தமிழ்ப் புலவர்கள். இந்த காருகாபத்தியம், ஆகவநீயம், தட்சணாக்கிணி என்பவை முழு பொய்தானா? எனின் இல்லை; இதிலும் உண்மை அறவே மறைக்கப்பட்டது. விபரம் இது:

சடாக்கினி (ஜீரணார்கனி) பிராணாக்கினி, ஞானாக்கினி எனும் இந்த மூன்று அக்கினிகளையும் நாம் சதா ஒத வேண்டும். இவை அவியவோ குறையவோ விடக் கூடாது. நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ, நல்லமுறையில் நம்முடலைக் காப்பாற்றிக் கொள்ளச்செரிமானசக்தியிருந்தால்தான் பிராணன் சக்தியுடையதாக இருக்கும். இவ்வாறிருக்க உள்ளம் மாசுபடியாது, துாய்மையானதாக இருக்க அறிவு வழியில் ஒழுகல் அவசியம். சத்தியம் அதற்கு அத்தியாவசியம். இது ஞானாக்கினி. சத்தியம் - ஞான சூரியன். அறவழி வாழ்க்கைப் பாதை. இதற்கு உடல் ஆரோக்கியம் அவசியமல்லவா?

உடல், உயிர், உள்ளம் செம்மைப்பட்டிருந்தால் நாம் மகானாகிறோம். அதாவது தெய்வமாகப் போற்றப்படுகிறோம். இந்த உண்மையை எந்த அரசனுக்கும் இவர்கள் சொன்னவர்களே அல்ல! வெளியே நெருப்பில் நெய்விட்டு எரித்து வேடிக்கைக் காட்டிவிட்டு வேதியர்களென தம்மை அழைத்துக் கொண்டுத் திரியும் இவர்களால் நாடு இன்றும் அமைதி காணாது அல்லல்பட்டுக் கொண்டுள்ளது. எனவே ஜீரணார்க்கினி, பிராணாக்கினி, ஞானாக்கினி இம்மூன்றும் உலகில் என்றும் நிலவுக. உண்மை வெல்க.

புது வெளிச்சம்

107