பக்கம்:புது வெளிச்சம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் பிறந்து அறிவு தோன்றத் தொடங்கிய ஐந்தாம் ஆண்டிலிருந்து காணாத பஞ்சம் (1987) பிரபவ ஆண்டு தொடங்கிய சித்திரை முதல் தேதியிலிருந்து காண முடிகிறது. ஆனால் இந்தப் பிரபவ ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆதிபத்தியபலன் இப்படியிருக்கிறது. அதிக மழை, சஸ்யதான்யாதிகள் அபிவிருத்தி, பசும் பால் பாக்கியங்கள் அபிவிருத்தியும், கோதுமை, நெல், மொச்சை, துவரை, பயிறு, உழுந்து, கடலை, எள்ளு, கொள்ளு அபிவிருத்தியாவதுடன் பின்பகுதியில் விலை சகாயமாகவும் அமையும்.

பருத்தி, வெண்பட்டு, பீதாம்பரம், ஜரிகை இழைகள், மஸ்லின் துணி வகைகள் அபிவிருத்தியும், எண்ணெய் வித்துக்கள் செழிப்படைதலும், புளி பால், தயிர், வெண்ணெய், தேங்காய், கரும்பு அபிவிருத்தியும் விலை ஸ்ரசமும் உண்டாகும், என்று கோடங்கிப் பேச்சுகள் போல் சுபீட்சத்துக்குரிய சொற்கள் சரளமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிநீரின்றி மக்கள் குலைகாயும் நேரத்தில் ஆரியப் பஞ்சாங்கம் குருடனுக்குத் திருடன் செப்பும் தெளிவுரை போல் பொய்ச் சொற்களை ஏன் அடுக்கிக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது. ஒன்றாவது இதில் உண்மையுண்டா? தமிழ் மக்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பஞ்சாங்கம் எழுதினவனை என்ன செய்தாலும் நம்மைப் பாவம் பற்றாது என்று தோன்றுகிறது.

சகுனியின் கையிலுள்ள சொக்கட்டான் காய்களை போன்று இந்தக் கோள்களும் நாள்களும் கெளடல்ய சந்ததிகளின் கையில் கிடைத்துள்ளதென கூறின் தவறேயாகாது.

நான் என்னை ஒரு கவிஞனென்றோ எழுத்தாளனென்றோ சொல்லிக் கொள்ள அசத்தனாவிருக்கிறேன். எனினும் உள்ளக் கொதிப்பு இப்படி வெண்பாவாக வடிக்க வேண்டியுள்ளது :

"அஞ்ஞானம் பற்றா தருமைக் குறள்தமிழில்
விஞ்ஞானம் பற்றி விளைந்திருந்தும் - இஞ்ஞான்றும்
கஞ்சாவும் கள்ளும் காவுமெனப் பஞ்சாங்கம்
மிஞ்சாமற் கொள்ளும் மெலித்து”.

எனப் பாடச் செய்கிறது. ஆம் இந்தப் பஞ்சாங்கம் எள்ளளவு

116

கவிஞர் வெள்ளியங்காட்டான்