பக்கம்:புது வெளிச்சம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செடி காய்களைவிட்டுக் காலப்போக்கில் காய்ந்துவிடுவது போலவே மனிதனும் இறந்தவன். இறந்தவன் ஏற்கனவே பிறந்திருக்கிறான்.

எனவே, பிரார்த்த கருமமோ சஞ்சித கர்மமோ உயிருடன் வாழும் வரையும்தான் அனுபவிப்பதே தவிர இறந்தபின் மண்ணாலாகிய உடல் மண்ணாகி, நீர், நீரோடும், வெப்பம், வெப்பத்தோடும், காற்று, காற்றோடும் கலந்து விடுவதுதான் உண்மை.

மனிதனுக்கு அறியாமை ஒன்றுதான் பகை. இந்தியாவில் மட்டும் தான் இந்த அறியாமைக்கு கோவிலும் கொண்டாட்டங்களும், பக்தியும், பஜனையும் இன்னும் அமோகமான ஆராவார ஆடம்பரங்களும் உண்டு.

எனவே, என்னை விட இந்த நாட்டில் கீழான அல்லது மேலான ஒரு மனிதன் கிடையாது. நாமனைவரும் மனிதர்கள் மட்டுமே எனினும் தன்னையறிந்தவன் தலைவனாகிறான். தன்னை அறிவதற்கான வழி சத்தியத்தை இருதயத்தில் சதா வைத்திருத்தல். அறநெறிவழுவாதொழுகல் மட்டுமே.

இப்போது நீ துக்கத்திலிருந்து நீங்கினாய், இருளிலிருந்து நீங்கினாய், அச்சத்திலிருந்து நீங்கினாய், உன்னிடம் ஆனந்தமன்றி வேறெதுவொன்றும் இல்லை. ஆம் இப்போது நீ அமரனானாய், மரணத்தை வென்றுவிட்டாய் எனவே என் வாழ்த்துக்கள் வாழ்க இவ்வையம்.


முதலில் சீர்திருத்தப்பட வேண்டியது தனி மனிதனை:சமூகத்தை அல்ல.

- டாக்டர் ராதாகிருஷ்னண்

மனிதன் கூட்டத்தோடு ஒன்றி வாழும் ஒரு இரண்டு கால் விலங்கு

சௌகா

64 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்