பக்கம்:புது வெளிச்சம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பராதீனம்


உலகத்தில் அனேகமாக யார் நாவிலும் உச்சரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு அகராதி அளவில் உயிர்வாழ்ந்து கொண்டுள்ள சொற்கள் இந்தப் பராதீனம், சுயாதீனம் எனும் இரண்டு மட்டும்தான். ஆற்றல் மிக்க இந்த இரண்டு சொற்களையும் அறிவில்லாத மனிதர்கள் அலட்சியம் செய்து ஒதுக்கி வைத்திருந்தால்தான் என்ன? இழப்போ இன்னலோ, இவ்விரண்டு சொற்களுக்கும் என்றும் நேர்வதில்லை. அவை மனிதர்களை மட்டும்தான் பிடித்துச் சாறு பிழிந்து சக்கையாய்க் காயவைக்கும்; ஐயோ ஆண்டவனே என்று கூவவும் செய்யும். கூனிக் குறுக வைத்துவிடும் சக்தி இந்த இரண்டு சொற்களுக்கும் உண்டு.

76

கவிஞர் வெள்ளியங்காட்டான்