பக்கம்:புதையலும் பேழையும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புதையலும்

கொலைக்களக் கொடுமை. பழிச்சொல்லும் கொடுவாளும் சேர்ந்து அவன் உயிரைப் பறித்துவிட்டன. அவலத்தின் உச்சியில் குமுறி நிற்கும் கண்ணகியாரிடம் சினமென்னும் பெருநெருப்பு கொழுந்து விட்டு நிற்கின்றது. இரண்டும் கூடின. ஒரு போக்குவீடும் காணாதவள் வெடித்தெழும் உணர்வால் விம்மிக் குமுறும்மார்பைப் போக்குவீடாக்கிக் கொண்டார்.

எனவே, கண்ணகியார் மார்பைச் சிதைத்துக் கொண்ட நிகழ்ச்சி உணர்ச்சிப் பிழம்பின் வெளிப்பாடு. நிகழக்கூடியதே. நம்பத்தகாதது அன்று கட்டுச்செய்திஅன்று; உறுதியாக நிகழ்ந்த தேயாகும். r

முப்பகுதி.

அடுத்து, எவ்வாறு ஒரு பெண் தானே தன் மார்பைச் சிதைத்துக்கொள்ள முடியும்? -என்னும் ஐயம் எழலாம். இங்கே சிதைத்தல் என்று குறிப்பது திருகிப் பறிப்பதைக் குறிப்பதாகும்

'இடமுலை கையால் திருகி'

r -என்று சிலம்பு குறித் கின்றது. எனவே திருகல் இயலும். அதனிலும், இடது மார்பை வலது கையால் திருகினார் என்பதும் வாய்ப்பானதே.

எவ்வாறு தனியே பிய்த்து எடுத்து எறிய முடியும் என்பதை நோக்கலாம். அதற்கு மார்பு அதாவது முலை பற்றிய உறுப்பு அமைப்பைப் புரிந்துகொள்ளல் நலம்.

கொங்கை, முலை என்னும் உறுப்பு மூன்று பகுதிகளாக அமைந்தது. (சொல்லாராய்ச்சி அறுவை மருத்துவம் போன்றது. அறுவை மருத்துவத்தின்போது மறைப்பு உறுப்பு, காட்சி உறுப்பு என்று உணர்ச்சிக்கு இடமில்லை. அது போன்று இங்கு முலை என்னும் சொல்லை அடிக்கடி சுட்டுவதைக் கொள்ளவேண்டும். சதைத் திரட்சி அமைப்பின் அடிவட்டமாகிய அடிப்பகுதியாம் தடம் இன்று. அது முலைத்திட்ம் முலை முன்றில்’ எனப்படும். இங்கேதான் பெண்கள் மனச்சாந்து களைக் கலையழகோடு பூசிக்கொள்வர். இப்பூச்சு, தொய்யில் எழுதல்’ எனப்படும். இதனைச் சிலப்பதிகாரம்,

1. சிலம்பு : வஞ்சினமாலை :48, -