பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறித்த மனிதர்களும். (விலங்கு, பறவை முதலிய இனங்களில்) குறித்த இனத்தைச் சார்ந்தவைகளும் தளர்ச்சியுறுதல், முதுமையடைதல், சிதைவுறுதல், நரைத்தல், சுருக்கு விழுதல், ஆயுள் குறுகல், வலிமையும், உணர்வுத் திறன்களும் குன்றுதல் ஆகியவையே அது. அது முதுமை எனப்படும். குறித்த மனிதர்கள் அல்லது ஜந்துக்கள் அழிந்து ஒழிதல், சிதறுண்டு போதல், மறைதல், நிலையற்றுப்போதல், மரித்தல், ஒரு முடிவுக்கு வருதல், கந்தங்கள் சிதைந்து பிரிதல், உடல் அழிதல் - இது மரணம் எனப்படும். இந்தத் தளர்ச்சியும், இந்த இறப்பும் மூப்புச் - சாக்காடு எனப்படும். பிக்குகளே தோற்றம் (பிறப்பு) என்பது என்ன? குறித்த மனிதர்களாகவோ, ஜந்துக்களாகவோ பிறப்பை அடைதல், உற்பத்தியாதல், இறங்கி வருதல், கருவிலிருந்து ஜனித்தல், கந்தங்கள் ஒன்று சேர்ந்து (உருப்பெற்று) வெளித்தோன்றுதல், புலன்களின் உணர்ச்சிகளைப் பற்றுதல் - இதுவே தோற்றம் எனப்படும். பிக்குகளே கருமத்தொகுதி (பவம்) என்பது என்ன? கருமத் தொகுதிகள் மூன்று வகைப்படும்: சுவர்க்கம் முதலிய உலகங்களிலோ, பூவுலகம் போன்ற உலகங்களிலோ, கட்புலனாகாத உலகங்களிலோ, தோன்றுவதற்கு ஆயத்தமாதல். இது பவம் எனப்படும். பிக்குகளே பற்று என்பது என்ன? பற்றுக்கள் நான்கு வகைப்படும்; ஆசைகளைப் பற்றுதல், கருத்துக்கள் அல்லது கொள்கைகளைப் பற்றுதல், (யக்ஞம், பூசை முதலிய) கிரியைகளைப் பற்றுதல், நான்' என்ற அகங்காரத்தைப் பற்றுதல் - இது பற்று எனப்படும். பிக்குகளே வேட்கை என்பது என்ன? வேட்கையில் ஆறு தொகுதிகள் உண்டு: உருவத்திலே கொள்ளும் அவா, ஒலியிலே கொள்ளும் அவா, முகர்வனவற்றிலே கொள்ளும் அவா, சுவைகளிலே கொள்ளும் அவா, தூலப்பொருள்களிலே கொள்ளும் அவா. கருத்துக்களிலே கொள்ளும் அவா . இது வேட்கை எனப்படும். பிக்குகளே நுகர்ச்சி என்பது என்ன? நுகர்ச்சியில் ஆறு தொகுதிகள் உண்டு. கட்புலன் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, செவிப்புலன் சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, நாசி சம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, நாசம்பந்தமாகத் தோன்றும் நுகர்ச்சி, ப. ராமஸ்வாமி | 83