பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 / புத்தரின் வரலாறு

பேறடைவதற்குரிய காரியங்களைச் செய்கிறார்கள்.என்னுடைய குமாரன் எந்தெந்தக் காரணங்களினால் உலக வாழ்க்கையில் வெறுப்படைவான் என்பதைக் கண்டு கூறவேண்டும்."

இவ்வாறு அரசர் கூறியதைக் கேட்ட நிமித்தகர் ஆராய்ந்து பார்த்து இவ்வாறு சொன்னார். "வயது முதிர்ந்த கிழவர், நோயாளி, பிணம், துறவி ஆகிய இந்நான்கு பேரைக் காண்பாரானால் உமது குமாரன் உலக குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவு கொள்வார்."

இவ்வாறு நிமித்திகர் சொன்னதைக் கேட்ட சுத்தோதன அரசர், தமது குமாரன் சக்கரவர்த்தியாக விளங்கவேண்டும் என்றுவிரும்பி, தனது மகனை இல்லறத்திலேயே நிற்கச் செய்வதற்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் யோசித்தார். "தொண்டு" கிழவர்களும் நோயாளிகளும் பிணங்களும் சந்நியாசிகளும் சித்தார்த்த குமாரனுடைய பார்வையில் படாதபடி தடுக்க நான்கு திசைகளிலும் நான்கு மைல் தூரம் காவலாளிகளை ஏற்படுத்தினார்.

(பிறகு, எட்டு நிமித்தர்களில் இளைஞரான கொண்டஞ்ரூரைத் தவிர மற்ற ஏழு நிமித்தகரும் தமது பிள்ளைகளை அழைத்து, "சுத்தோதன அரசர் மகனான சித்தார்த்த குமரன் புத்த பதவியை அடைவார். அப்போது நாங்கள் உயிருடன் இருப்போமோ மாட்டோமோ, தெரியாது. ஆனால் நீங்கள் அவரிடஞ் சென்று அவர் உபதேசத்தைக் கேட்டு அவரிடம் துறவு கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

பின்னர் இந்த ஏழு நிமித்திகரும் காலப்போக்கில் காலஞ்சென்று விட்டார்கள். இளைஞராக இருந்த கொண்டஞ்ஞர் அப்போது கிழவராக இருந்தார். சித்தார்த்த குமரன், துறவு பூண்டார் என்னும் செய்தியைக் கேட்டு கொண்டஞ்ஞர், ஏழு நிமித்திகரின் குமாரர்களிடம் சென்று தாம் புத்தரிடம் உபதேசம் பெறப்போவதாகக் கூறி அவர்களையும் தம்முடன் வரும்படி அழைத்தார். அவர்களில் மூவர் இணங்கவில்லை. நால்வர் மட்டும் இசைந்து கொண்டஞ்ஞருடன் சென்றார்கள். இந்த ஐவரும் முதன்முதலில் புத்தரிடம் ஞானோபதேசம் பெற்று பௌத்தரானார்கள்.)

சுத்தோதன அரசன், தனக்குக் குழந்தை பிறந்ததற்காக மகிழ்ந்து ஏராளமான பொன்னையும் பொருளையும் வழங்கித் தான தருமம் செய்தார்.

சித்தார்த்த குமாரன் பிறந்த ஏழாம் நாள் மாயா தேவியார் காலமானார்.