பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்மைசெய் வோனும் நீயே!
நலமறத் துன்பு றுத்தும்
தின்மைசெய் வோனும் நீயே!
தின்மையோ நன்மை தானோ
உண்மையில் உனது செய்கை;
ஒருவரும் பொறுப்பா காரே.
உன்னையே நீயே தூய்மை.
உடையனாய்ச் செய்தல் வேண்டும்.

38


உன்னிலும் பெரியோர் என்றே
ஒருசிலர் மகிழப் போற்றி
அன்னவர் தமக்கு மட்டும்
அரியபல் நன்மை செய்தே
உன்னைநீ மறத்தல் வேண்டா
உன்னுடைக் குறிக்கோள் விட்டே;
பொன்னினும், நேர்மைப் பண்பைப்
போற்றியே காத்தல் வேண்டும்

39


18. உலக இயல்

நீரிலே குமிழி போல
நிலையிலை உலக வாழ்வு
காரளி நீரி ருக்கக்
கானலை நாட லாமோ?
ஆருமின் கனியி ருக்க
அருந்தலேன் காஞ்சி ரங்காய்?[1]
நேருற அறமி ருக்க
தேடலேன் தீமைப் பாதை?

40

14

  1. 45