பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புத்தர் போதனைகள் இரண்டாவது பாவனை கருணையைத் தழுவிய கருணா- பாவனை: இதிலே, துயரப்படுகின்ற சகல ஜீவன்களையும் பற்றி எண்ணி, அவர்கள் துக்கங் களையும் கவலைகளையும் கற்பனை செய்து கண்டு கொண்டு, அதன் மூலம் அவர்களிடம் உள்ளத்தில் கருனை எழும்படி செய்து கொள்ள வேண்டும். மூன்றாவது பாவனை ஆனந்தத்தைத் தழுவிய முதித-பாவனை; இதிலே மற்றவர்களுடைய இன்ப ாகலன்களைப் பற்றி எண்ணி, அவர்களுடைய ஆனந்தங்களோடு கலந்து இன்புற வேண்டும். நான்காவது பாவனை அசுத்தத்தைப் பற்றிய அசுப -பாவனை; இதிலே, ஒழுக்கக் குறைவு, பாவங்கள், ாேகாய்கள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எண்னவேண்டும். கணகேரத்து இன்பம் எவ்வளவு விபரீதப் பயன்களை உண்டாக்குகின்றது என்பதைக் கருதவேண்டும். ஐந்தாவது பாவனை எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் உபேட்சா-பாவனை; இதிலே, விருப்பு, வெறுப்பு, கொடுமை, துன்புறுத்தல், செல்வம், வறுமை முதலியவற்றிற்கு மேலாக எழுந்து, உங்கள் கிலைபற்றி, ஆசையோ, வெறுப்போ இல்லாமல், பூரணமான சாந்தியுடன் கருதவேண்டும்.27 (தியானங்களில் நான்கு வகை உண்டு. ஏகாந்த மான இடத்திலே அமர்ந்திருந்து, புலன் இன்பங் களைத் துறப்பது பற்றிச் = செய்யும் தியானம் முதலாவது; இன்பமும் எழுச்சியும்_நிறைந்த உபசாந்தி பைப் பெறுதல் இரண்டாவது தியானம்; உடலுக்கு அப்பாற்பட்ட இன்பத்தில் திளைக்கும் முறையில்