பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. திவினைகள் புதிதாய்க் கறந்த பால் போலே, பாவச் செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை; நீறு பூத்த கெருப்பைப்போல் கனன்றுகொண்டேயிருந்து, அது மூடனைத் தொடர்கிறது." மனிதன் பாவத்தைச் செய்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பச் செய்யாதிருப்பானாக. அவன் அதில் திளைத்திருக்க வேண்டாம்; பாவ மூட்டை மிகவும் துக்ககரமானது." 带 'என் பக்கம் அண்டாது' என்று பாவத்தை இலேசாக எண்ணவேண்டாம்; துளித் துளியாக விழும் தண்ணிராலேயே குடம் நிரம்பிவிடும். பேதை கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்தைச் சேர்த்தாலும், அவன் பாவத்தால் கிரம்பி விடுகிறான்." 帶 ஏ மானிட! இதை அறிந்துகொள்! பாவத்தை எளிதில் அடக்க முடியாது. பேராசையும் தீயொழுக் கமும் உன்னைத் தீராத துக்கத்தில் அழுத்தாமலிருக் கட்டும்.' காம வெறி போன்ற அனல் வேறில்லை: துவேஷத்தைப் போல் பற்றிக்கொள்ளும் முதலை வேறில்லை; (தெளிவின்றி) மயங்குதலைப் போன்ற வலை வேறில்லை: ஆசைகளைப்போல் (அடித்துக் கொண்டு போகும்) ஆறு வேறில்லை." 驛 பிக்குகளே! உயிர்க்கொலை தீது, களவு தீது, சிற்றின்ப உணர்ச்சிக்கு அடிமைப்படுதல் தீது, பொய் பேசுதல் தீது, கிந்தனை தீது, பயனற்ற பேச்சு