:பிலஹரி' ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரி இரண்டு பக்கங்கள் எழுதுகிரு:ர். பத்து ரூபாய் சன்மானம் பெறும் எழுத்தாளர் பத்தே வரிகள் எழுதுவார். முன்னவரின் எழுத்துக்கு மதிப்பு, கெளரவம் எல்லாம் ஆபீஸ் சுவர் களுக்கிடையேதான். பின்னவரின் பேணுவுக்கோ, படிக்கத் தெரிந்த பாமரர் உள்ள இடத்திலெல்லாம் வரவேற்பு. காரணம், எழுத்தாளனின் எழுதுகோல் கிறுக்குவது ஒரு * படைப்பு.’ "எழுதுவது ஒரு கலை’-ரசனை உள்ளம் படைத்த வாசகப் பெருமக்களின் கெளரவமான கூற்றுதான் இது. ஐயமில்லை. ஆளுல் எழுத்தாளனுக்கோ...? .” ரைட்டிங் என்னுடைய பொழுது போக்கு சார்!...” என்று ஒரு சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது விஷயமாக நான் சிந்தித்ததும் உண்டு. அப்படி ஒர் எண்ணம் எழுதுபவனுக்குப் பலம் பொருந்திய சூழ்நிலை என்று கூற முடியுமா? எங்கள் படைப்பு உங்களுக்குக் கலையாகத் தோன்ற லாம். ஓரளவு இது உண்மையுந்தான். ஆனல் நாங்கள் இதை ஒர் உபாசனையாக ஏற்றுக் கொள்கிருேம். நாங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆண்டவனே