பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

147


உள்ளது. கொழுவிய அவ்விறைச்சியை ஒரு கையிலும், நீ தரும் மதுவை மற்றொரு கையிலும் வைத்துக் கொண்டு மாறி மாறி உண்போம். நின்னைக் காண வந்துள்ளேன்.

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர உண்கும், எந்தை நிற் காண்கு வந்திசினே, நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள! நின் மகிழ் இருக்கையே. உழுத நோன் பகடு அழி தின்றாங்கு நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே, குன்றத்து அன்ன களிறு பெயரக் கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; வெலிஇயோன் இவன் என. ‘கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு விரைந்து வந்து, சமம் தாங்கிய, வல் வேல் மலையன் அல்லன் ஆயின், நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத் தோற்றோன்தானும், நிற் கூறும்மே, ‘தொலைஇயோன் இவன் என, ஒரு நீ ஆயினை-பெரும பெரு மழைக்கு இருக்கை சான்ற உயர் மலைத் திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே

திணை - வாகை, துறை - அரச வாகை.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருத வழிச்சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

126. மலையமான் திருமுடிக்காரி

உன் முன்னோர்கள் கொடுத்துப் புகழ் பெற்றவர்கள். எதிரிகளின் யானைகளின் பட்டத்தில் இருந்த பொன்னைக் கொண்டு பொற்றாமரையாக்கிப் பாணர்க்குத் தந்து புகழ்பெற்ற வர்கள். போரிலும் ஈகையிலும் சிறந்தவர்கள்; அவர்கள் வழி வந்தவன் நீ.