பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

251



அவன் இல்லாமல் இங்கு அவன் படைகள் செயலிழந்து விட்டன. யானைகள் தரையில் படுத்து உறங்குகின்றன. முரசு அடிப்பாரின்றிக் கிழிந்து கிடக்கிறது; குடை சாய்ந்து கிடக்கிறது. குதிரைகள் ஒட்டம் இன்றி வாட்டம் உற்றுக் கிடக்கின்றன.

அவன் உரிமை மகளிர் அவர்கள் தனிமையில் கிடக்க

அவர்களை விட்டுப் பிரிந்து வானத்துத் தெய்வ மகளிருடன் புது உறவு கொண்டு அவர்களுக்குத் துணைவனாகி விட்டான்.

ஆடு இயல் அழல் குட்டத்து ஆர் இருள் அரை இரவில், முடப் பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம் காயப், பங்குனி உயர் அழுவத்துத், தலை நாள்மீன் நிலை திரிய, நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தரப், தொல் நாள்மீன் துறை படியப், பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, அளக்கர்த் திணை விளக்காகக் கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி, ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், ‘பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் நோய் இலன்ஆயின் நன்றுமன் தில் என அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே: மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், கால் இயற் கலி மாக் கதி இல வைகவும், மேலோர் உலகம் எய்தினன் ஆகலின், ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகித், தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோபகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை, மணி வரை அன்ன மாஅயோனே?