318
புறநானூறு செய்யுளும் செய்திகளும்
மடவர் மகிழ் துணை நெடு மான் அஞ்சி இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் கான்று படு கனை எரி போலத், தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங்காலே.
திணையும் துறையும் அவை.
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
316. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
கள் மயக்கத்தில் உலர்ந்த சருகுகளின் தூசு படிந்த தன் வீட்டு முற்றத்தில் தூங்குகின்றான். விடிய விடியத் தூங்குகிறான். அவன் என் தலைவன்; யாம் அவன் பாணன்.
நேற்று அவனைத் தேடி வந்த விருந்தினர்க்கு உணவு தரத் தன் வாளை அடகு வைத்தான்.
இன்று அவனிடம் யாதும் இல்லையென்று கருதாதீர். எதையாவது அடகு வைத்து எப்படியாவது நம்மை உபசரிப்பான். இது உண்மை; யாழ் மீது ஆணை, நீயும் நின் விறலியும் எம்முடன் வருக; விறலி இழையணி பெறுவாள். நாம் கள் பெற்று மகிழ்வோம்.
சென்று நம் வாய் சிவந்து வருவோம்; பசி பறந்து போகும்.
யானை மீது வந்த அரசனை வீழ்த்திவிட்டு அவன் களிப்புடன் உறங்குகின்றான்.
அவன்பால் பரிசில் பெறுவது உறுதி; எம் யாழின் மீது ஆணை.
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே.
அவன் எம் இறைவன், யாம் அவன் பாணர்,
நெருதை வந்த விருந்திற்கு மற்றுத் தன்