பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


அந்த ஆட்சி அவர் வாரிசுக்கே போகிறது என்று கூறமுடியாது. யார் கொடுத்து வைத்திருக்கிறார்களோ கூற முடியாது. வேற்று நாட்டவர்க்கும் அது சென்று போய்ச் சேர்ந்து விடுகிறது.

வாழும் போது வாழ்த்து உரைக்கும் அந்தணர்க்கு ஈக மகளிர் பொற் கலத்தில் தேறல் தர அதை ஏற்றுப் பருகி மகிழ்க இரவ லர்க்குப் பொன் ஆபரணங்களைத் தந்து அவர்களைச் சிறப்பிக்க.

இதுவரை நீங்கள் இயற்றிய நல்வினைகள் உங்களுக்கு உற்ற துணையாகும்; அதனால் இறுதிவரை அறச் செயல்களை உறுதி யுடன் இயற்றுக. இதைத்தான் யான் உமக்கு அறிவுறுத்த இயலும்.

நீ வானத்துத் தோன்றும் மீன்களைப் போலவும், மழைத் துளிகளைப் போலவும் பல ஆண்டுகள் ஒளி பெற்றுப் பிறர்க்குப் பயன்பட்டு வாழ்வாயாக.

நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் தமவேஆயினும் தம்மொடு செல்லா, வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! யான் அறி அளவையோ இதுவே வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கு மா மழை உறையினும், உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் தாளே! திணை - பாடாண் திணை, துறை - வாழ்த்தியல் சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.