பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

365



368. சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதன்

களிறு முகக்குவோம் என்றால் அம்புகள் பட்டு அவை அழிந்துவிட்டன.

தேர்கள் அவை சிதைந்து சீர் அழிந்து நிலத்தில் சாய்ந்து கிடக்கின்றன. -

குதிரைகள் காற்றுக்குச் சாயும் மரக் கலத்தைப் போல வடுப்பட்டு மடிந்து கிடக்கின்றன.

வாளேர் உழவ தடாரிப் பறையை அறைந்து கொண்டு உன்னைப் பாடுகின்றேன்.

உன்னிடத்தில் பெறுவதற்கு யாது உளது? அனைத்தும் அழிவு பட்ட நிலையில் துணையின்றித் தனிமனிதனாக உள்ளாய்; உன் கழுத்தில் உள்ள ஆரம்தான் எஞ்சியுள்ளது.

களிறு முகந்து பெயர்குவம் எனினே, ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலக், கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; கொய் சுவற் புரவி முகக்குவம்எனினே, மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, வளி வழக்கு அறுத்த வங்கம் போல, குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க முகவை இன்மையின் உகவை இன்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! கடாஅ யானைக் கால்வழி அன்ன என் தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றிப், பாடி வந்தது எல்லாம், கோடியர் முழவு மருள் திரு மணி மிடைந்த நின் அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே,

திணை - வாகை துறை - மறக்களவழி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேற்பல் தடக்கைப்

பெருநற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத் தலையார் பாடியது.