பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

389


நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து,

வே யன்ன மென் தோளால்,

மயில் அன்ன மென் சாயலார்,

கிளிகடி யின்னே; - - கல் அள்ளற் புள்இரீஇ யுந்து, 15 ஆங்கப், பலநல்ல புலன் அணியும்

சீர் சான்ற விழுச் சிறப்பின், சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் செல்லா நல்லிசை உறந்தைக் குணாது, நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் 20

அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக் கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத், தன்கடைத் தோன்றி, என்.உறவு இசைத்தலின், தீங்குரல்......கின் அரிக்குரல் தடாரியொடு, 25 ஆங்கு நின்ற எற்கண்டு

சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான், அருங்கலம் வரவே அருளினன் வேண்டி, ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, 'இவனை 30

என்போல் போற்று என்றோனே; அதற்கொண்டு, அவன் மறவ லேனே, பிறர்உள்ள லேனே; அகன் ஞாலம் பெரிது வெம்பினும், மிக வானுள் எரி தோன்றினும்,

குள மீனோடும் தாள் புகையினும், 35

பெருஞ்செய் நெல்லின் கொக்கு.உகிர் நிமிரல் பசுங்கண் கருணைச் சூட்டொடு மாந்தி, 'விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க' என, உள்ளதும் இல்லதும் அறியாது, ஆங்கு அமைந்தன்றால், வாழ்க, அவன் தாளே! 40 வயலிலே உழும் உழவர்கள் காடுகளிலே பகடுகளை மேய விட்டுவிட்டுச் சூடான முயற்கறியும் வாளைமீனைப் பலவகை யாகப் பக்குவப்படுத்திய கறிகளும் பழஞ்சோற்றுடன் உண்டு, தளவப்பூச் சூடிக்கொண்டு, அரிப்பறையால் புள்கடிந்து, நெல்லிலிருந்துவடிக்கப்பட்ட கள்ளினை அருந்தி மகிழ்வர்.மனைக் கோழியின் குரலுக்குக் கானக்கோழி பதிற்குரல் எழுப்பும்; நீர்க்கோழியும் கூப்பிடும், சிறு பெண்கள் கிளியோட்ட அதனால்