பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V பொதுவியல் முற்கூறியவற்றுக் கெல்லாம் பொது வாயுள்ளனவாக, அவற்றுள் கூறப்படாதொழிந்தனவற்றைக் கூறிச் செல்வது, கைக்கிளை ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருபகுப்பாக இயங்கும். ஒருமருங்கு பற்றிய கேண்மையினை விளக்குவது. - w பெருந்திணை ஆண்பாற் கூற்று, இருபாற் பெருந்திணையென்னம் பகுப்புக்களோடு இயங்கும் பொருந்தாக் காமத்தினது ஒழுக்கத்தையும் ஒழிவு பாடாண் பகுதியிலும் வாகையிலும் கூறப்படாதொழிந்த புறத்துறைச் செய்திகளையும் உணர்த்துவன. இவ்வாறாக, இத்திணைகள் இயங்கும் துறைகளோடு அமைந்துள்ள இந்நூல், தமிழகத்துப் புறப்பொருள் ஒழுக்கம் செவ்வைப்பட நின்று இயங்கிய சீரினைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளதன் அருமையினை நோக்கித் தமிழன்பர்கள் ஆழ்ந்து கற்றுப் பயனடைதல் வேண்டும். புறப்பொருள் பற்றியவாக வரும் இலக்கிய நூற்களின் பொருள் நயத்தினை முற்றவும் அறிந்து பயன்பெற வேண்டுமானால், புறப்பொருள் இலக்கணத்தின் அமைதிகளைத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். அவ்வகையில், இந்நூல் தமிழ் அன்பர்கட்குச் சிறந்த துணையாக அமைந்து உதவும். புலியூர்க் கேசிகன்