பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

usuacasas o elemuu es 5. நின்றதை வியந்து கூறும் ஒருதனி நிலையும் புறமுதுகு இட்டான்மேல் வாளோச்சாது நின்ற வீரனது தகுதியைப் போற்றும் தழிஞ்சியும், பகைமன்னர் அடிபட்ட பின்னரும் நாடு திரும்பானாக வஞ்சிவேந்தன் படைவீட்டில் இருத்தலாகிய பாசறைவஞ்சியும்; பகைநாட்டைக்கைப்பற்றிய பின்னர் மீண்டும் அதனை எரிகொளுவுதலாகிய பெருவஞ்சியும் பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தலாகிய பெருஞ்சோற்று நிலையும், பகைவரது போர்முனை கெடுமாறு அழித்த வெற்றி வேலோனது விறலினைச் சிறப்பித்துக் கூறுதலும் அதனை மறுத்துப் பகைநாட்டின் அழிபாட்டு நிலையைக் கூறுதலுமாகிய நல்லிசை வஞ்சியும் ஆகியவை ஆகும். - - ಛಿಛಿಛಿ ।