பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}& பாற்கடல் பண்ணட்டும், பண்ணட்டும்; கான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியு மதுவுமாய், அவ்வளவு தாரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதின வாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்னுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ? இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, கான் அசடு, போங்கோளேன்; திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒன்னும் வைத்துக் கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்: 'ஜகதா கிட்டே யாரும் அசதி மறதியாக்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர் கிட்டேயும் சொல்லக் கூடாது என்றால் ஒரு கடிதாசுத்துண்டிலாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுவி. ஆமாம், அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள், கான் பின் யாரிடத்தில் சொல்லிக் கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாக கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல் லாப்பை கட்டிக்கவா? கான் அசடாயிருக்கலாம்; ஆனால் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா; நீங்களே சொல்லுங்களேன்! .. தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வக் திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகனும் என்று. நீங்கள் ஊரில் இல்லை, இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கனுமே, எடுத்து மறு படியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த்தானிருந்தது.