பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா ய ம் 劉.」胃掌 இன்று பிற்பகல் மயிலாப்பூர் போயிருந்தேன். உள்ளே நுழைஞ்சதும் நுழையாததுமா அம்மா, 'மாப்பிள்ளை இப் பத்தான் போனார். அவர் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே வருஷம் மூனுக்குமேல் ஆறது. என்ன விசேஷம்: ஒரு கேலரி கிளறி, பஜ்ஜி போட்டுத் தரலாம்ன்னு பார்த்தால் இன்னிக்கு ரவையும் கடலைமாவும் கடையிலே இல்லே. தெரிஞ்சுண்டே மனுஷன் வந்தாரோன்னு எனக்கு அவர் மேலே ஆத்திரம் வந்தது. கடையிலே வாங்கினால் கடலைமாவா அது வெறும் பட்டாணி மாவு. தோச்சுப் போட்டால் எண்ணெய் பொங்கி வழியும். நம்ம வாங்கி அரைக்கற மாதிரி ஆகுமா?’’ சரி சரி... நீ அவரிடம் பஜ்ஜியைப் பத்தித்தான் பேசிண்டிருந்தையா? இல்லை, நீ போட முடியாத பஜ்ஜியைத் தின்ன அவர் வந்தாரா?” - "நான் உன்னைக் கேட்டால், நீ என்னைக் கேக்கறே. வராத மனுஷன் வந்தால், விஷயமில்லாமல் வருவாரா? அதுவும் இந்த மாப்பிள்ளை' அட, உனக்கு எத்தனை மாப்பிள்ளை, இந்த மாப்பிள்ளையைத் தனியாக குறிக்க: சரி, என்ன விசேஷம்?" 'அதுதான் தெரியல்லியே! ஆனால் என்னவோ சொல்லத்தான் வந்திருக்கார். அதுக்குள் சொல்லலாமா வேண்டாமா-ரெண்டு மனசு போலவோ? உமா செளக்கிய மா'ன்னு கேட்டேன். எதோ ஒண்ணு) ஆரம்பிக்கனுமே!