பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா. 9 "பூக்காத பூக்களைப்பற்றி என்ன சொல்றேள்?" சட்டென ஒரு ஊமைத்தனம் அவர்களிடையே தீடீ ரெனத் தேங்கிற்று. அதனால் தான் என்னடா அப்பா பதில் பேசலையே என்று அவள் தலை நிமிர்ந்து பார்த் தாள். அவர் அவளை ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண் டிருந்தார். விழிகள் தமுலாய் மாறியிருந்தன. சற்று நேரங் கழித்து அவர் வார்த்தைகள் சாதாரணமாய் வந்தாலும் அந்தக் குரலைக் கேட்க அவளுக்குப் பயமா யிருந்தது, ரிஷியின் சாபம் போல். 'பார்க்கவி, நீ ஒரு அபஸ்மாரம். ஆமாம், சந்தேகமே யில்லை. ஒரு அபஸ்மாரம்.' 'ஏம்பா திடீர்னு கோவிச்சுக்கறேள்? நான் என்ன - * * பண்ணிட்டேன்? ‘'நீ இன்னும் ஏன்ன பண்ணனும்? பெண்ணாய்ப் பிறக் துாட்டு பூக்காத பூக்களைப்பற்றி உனக்கு முதலில் எண்ணம் தோணித்தே, அது போதாதா? நீ ஒரு அபஸ்மாரம்.’’ “என்னப்பா நீங்கள் எதோ சொல்லிண்டே வந்தேள். நானும் ஏதோ கேள்வி கேட்டுண்டே வந்தேன். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன தர்க்கம்? இதில் என்ன தப்பு'-அவள் உதடுகள் கோப அழுகையில் நடுங்கின. 'பார்க்கவி! உன்மேல் நான் கோபிக்கவில்லை. ஆனால் கேட்கத் தேன்றினாலும் கேட்கக்கூடாத கேள்விகள் இருக் கின்றன. செய்யக் கூடாத காரியங்கள், சொல்லக்கூடாத வார்த்தைகள், கேட்கக்கூடாத கேள்விகள்-இதில் கான் எதையும் மன்னிச்சுடறேன். ஆனால் தோன்றக்கூடாத எண்ணங்களை எண்ணுபவர்கள் தோன்றவே கூடாது. அப்படித் தோன்றினால் அவர்கள் ஒரு சாபக்கேடு, அவர்