இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
77
முல்லை பிஎல். முத்தையா 77
கேள்விக்குச் சரியான பதில்
ஆற்றின் கரையில் நின்று இரண்டு புலவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்,
அவர்களில் ஒருவர் மற்றவரை மட்டம் தட்ட எண்ணினார். -
ஆறுக்கு அப்பால் என்ன இருக்கிறது? இப்பால் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்.
ஆற்றுக்கு என்று கேட்காமல், ஆறுக்கு என்ற குறும்பான கேள்வி கேட்டதனால், இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறது என்று எண்ணிய மற்றொரு புலவர், "ஆறுக்கு அப்பால் எழும், இப்பால் ஐந்தும் இருக்கின்றன’’ என்று மறுமொழி கூறினார்.
அண்டம் காக்கப் பிறந்தவர் யார்?
கறுப்பு நிறமுடைய புலவர் ஒருவர் வறுமை யில் உழன்றதால், எலும்பும் தோலுமாக இருந்தார்.
அரசனைப் பார்த்து, பரிசு பெறலாம் என்று எண்ணிச் சென்றார் புலவர். .
அவரைப் பாாத்ததும், இவர் அண்டங் காக்கைக்குப் பிறந்தவர் போலும்’ என்று அருகில் இருந்த அமைச்சரிடம் மெதுவாகக் கூறினார்.