7. இராமன் 3779 விர சக்கரவர்த்தியாகிய நீங்கள் உருத்து எழுந்தால் சிங் கத்தைக் கண்ட நாய்கள்போல் குரங்குகள் உடல் நடுங்கி உள் ளம் கலங்கி ஒடி ஒழியும் என இராவணன் உவந்து மகிழும்படி இங்ங்னம் புகழ்ந்து மொழிந்துள்ளான். யாண்டும் நேரில்லா வெற்றி விரனுய் விளங்கி வந்துள்ள மையால் இங்ங்னம் அவனது கொற்றம் கொழித்துக் ക. /D நேர்ந்தான். சேஞ பலக்கையும் மன்னனது உக்கிர வீர நிலைகளையும் இன்னவாறு பேசி வந்தவன் முடிவில் தனது பிரதாபங்களைக் குறித்துக் காட்டினன். 'வந்துள்ள வானரப் படைகள் எல்லாம் சிந்தி ஒடிக் கடலில் விழுந்து ஒழியும்படி அழிவு செய்து விடு வேன்; எனது அருந்திறல் ஆற்றலே ஆண்டவன் ஈண்டிருக்கே கண்டு மகிழலாம்; சேனையோடு சென்று விரைந்து போராடி வென்று வருகிறேன்; விடை தந்தருளுங்கள்” என்று சேனைத் தலைவன் தேசத் தலைவனை வணங்கி வேண்டினன். இந்திரன் முது கண்ட இராவணன். அரக்கர் பதியை ஈண்டு இவ்வாறு கவி காட்டி யிருக்கிரு.ர். தேவலோகங்கள் யாவும் கவர்ந்து தேவராசனப் புறங் காட்டி ஒடும்படி வென்று மகா வெற்றி வீரய்ை விளங்கி யிருப் பவன் ஆதலால் அவனுடைய உக்கிரவீர நிலைகள் உணர வந்தன. வானவர்கள் வந்து வணங்கி ஊழியம் புரிய யாண்டும் ஆணே செலுத்தி வணங்கா முடிமன்னனப் அரியணையில் விற்றி ருப்பவன் வானரர்களோடு போராட ஆலோசனைகள் செய் துள்ளான் என அவனது பழைய தலைமையும் புதிய கிலேமையும் அதிசய வினேகமா ஒருங்கே தெரிய உணர்த்தி யருளினர். தலைமையான சேனதிபதி இவ்வாறு பேசி முடிக்கவே மாலியவான் மீண்டும் துணிந்து பேச நேர்ந்தான். அவனுடைய வாய்மொழிகள் அரிய பல உண்மைகளை உணர்த்திப் பரிவு தோய்ந்து வந்தன. அயலே வருகின்றன; கருதிக் கானுக. மாலியவான் உறுதிமொழிகள். பூசற்கு முயன்று நம்பால் பொருதிரைப் புணரி வேலேத் தேசத்துக்கு இறைவனை தசரதன் சிறுவன் தன்னே