4064 கம்பன் கலை நிலை 'மலையில் விழும்பனி, நதியில் எழும் நுரை, நீரில் தோன் மறும் குமிழி என நீ அழிந்து போவாப்! இது என்றும் உறுதி' என ஸ்காட் என்னும் ஆங்கிலக் கவிஞர் கூறியுள்ளதும் ஈங்கு அறியவுரியது. அழிவு கிலே அறிவதால் தெளிவு விளைகிறது. அகித்திய நிலையை அறிந்தவர் நித்திய உண்மைமைகளை உணர்ந்து கொள்ளுகின்றனர். கொள்ளவே யாண்டும் மயங் காமல் எவ்வழியும் அவர் கலைழையாய்க் கழைத்து நிற்கின்றனர். இலங்கைச் செல்வத்தை உனக்குத்தந்து சக்கரவர்த்தியாக உன்னை அரியணையில் எழுந்தருளச் செய்து உன் கீழ் ஊழியன யிருந்து என்றும் நான் ஏவல் புரிந்து வருவேன் எனக் |கன்னேடு சேர்ந்துகொண்டால் சேரும் சீரிய வாழ்வை வீடணன் முன்னம் விளக்கிக் கூறினன் ஆதலால் அதற்குப் பதில் கும்பகருணன் அதி விநயமாய் இங்ங்னம் உரைக்க நேர்த்தான். கீர்க்கோல வாழ்வை நச்சி நான் கொச்சையாய் வாழேன் என்று குறித்திருத்தலால் அவனது உச்ச நிலை உணர வந்தது. இதில் கம்பியின் வாழ்வைப் பச்சையாப் பழித்திருப்பது போல் தெரியினும் அவன் ஒதுங்கி வாழ்வதை உண்மையாகவே இவன் உவந்திருக்கிருன். போர்க் கோலம் செய் து விட்டான். கன்னே அண்ணன் போருக்கு ஆயத்தம் செய்து அனுப்பி யுள்ள நிலையை இவ்வண்ணம் உணர்த்தியிருக்கிருன். கம்பி போருக்குப் போயுள்ளான்; பகைவரை அடியோடு வென்று வருவான் என்று கன்னை உறுதியாக நம்பி எதிர்பார்த்திருப்பான்; அக்க நம்பிக்கைக்கு மோசம் செய்யலாகாது என்னும் குறிப்பு இக்க வாசகத்தில் நன்கு கொனித்துள்ளது.' - கெடிதுநாள் வளர்த்து என்றதில் தான் வளர்ந்து வந்துள் ளமை உளம் தெரிய வந்தது. அரசனுக்குத் தம்பியாயிருக்கா அம் செல்வ வளங்கள் யாவும் அவனுக்குத் தனியுரிமையுடை யன. அவன் உள்ளம் உவந்து பிள்ளையைப் பெற்ற தங்தை பேணி வந்தது போல் தன்னைப் போற்றி வளர்த்து வந்துள்ளான் என அவனது உரிமையையும் உதவியையும் இங்கனம் பெருமை யாகப் போற்றி அருபை தெரியக் கூறினன்.