பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.09 | அல்லினல் செய்த நிறத்தவன் அனேயது பகர மல்லினல் செய்த தோளினன் மாற்றங்கள் அதும்பால் வில்லினல் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச் சொல்லினுல் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னன்.(3) போராட நேர்ந்த கும்பகருணன் இலக்குவன நோக்கிக் கூறியதும், அதற்கு இவன் மாறு கூறியுள்ளதும் வீரச் சுவைக ளாய் விளைந்து வந்துள்ளன. வில்லாடல் சேருமுன்னரே சொல் லாடல்கள் நேர்ந்திருப்பது உல்லாச விைேதங்களாய்க் தோன் அறுகின்றது. விற்போர் மூளுமுன் சொற்போர் மூண்டுள்ளது. இலக்குவனேக் கண்டதும் கும்பகருணனுக்குக் கோபம் மூளவில்லை என்று தெரிகின்றது. நல்ல அழகன் ஆதலால் இக்க இளவலை நேரே காணவே கொஞ்சம் பேசிப் பார்க்கலாம் என் லும் ஆசையால் அவன் பேச நேர்ந்தான். பேச்சுகள் உல்லாச மான சல்லாபங்களாய் ஒளிபுரிந்து வெளி வந்தன. இராமன் தம்பி :ே இராவணன் தம்பி கான். இந்த வார்த்தை எவ்வளவு சுவையாப் எ ழுந்துள்ளது! போராட நேர்ந்த சோடிகள் எவ்வழியும் தகுதியுடையன என்று உவகை கூர்ந்திருக்கிருன். உன் அண்ணன் என் அண் :ணளுேடு போராட மூண்டு வந்திருக்கிருன். நீ என்ளுேடுபோர் செய்ய நேர்ந்திருக்கிருப். பிறப்புரிமையிலும் சிறப்பு நிலையிலும் சீர்மை நிறைந்துள்ளமையால் போர்முறைமை அதிக மேன்மை யாக வாய்ந்து அரிய பல உரிமைகள் தோய்ந்துள்ளது. பெரு வீரர்களுக்குக் கம்பியர்களா அமைந்துள்ள நாம் இன்று பொருதிறலோடு போர்க்களத்தில் எதிர்ந்துள்ளோம்; நாம் பயின்று தெளிந்துள்ள போர் முறைகளும் திறல்களும் வெளிவர நேர்ந்துள்ளன. நமது போராடல்களைக் காண விழை ந்து தேவர்கள் யாவரும் மேலே ஆவலோடு திரண்டு நிற்கின்ற னர். காம் விரைந்து போர் செய்ய வேண்டும். எங்களோடு உடன் பிறந்திருந்த 3T 3టెT. El அருமைத் தங்கையை வினே மூக்கை அறுத்த வெற்றி விரன் அல்லவா நீ; அவளது கூந்தலைத் தொட்டு இழுத்த அந்தக் கையைத் துணித்துக் தரையில் விழ்த்