பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4968 கம்பன் கலை நிலை இரண்டு கைகளால் இராமன் இங்கே மூலபலங்களைக் கொன்.று முடித்தான் என் பார் ஆயிரம் கைகள் செய்த செய்தன. அமலன் செங்கை என்ருர். பொருகையில் இருகை செய்த செயலே இவ் வகையில் செவ்வையாக விளக்கினர். ஆயிரம் என்றது. பத்து நூறு என்ற எண்ணலளவையில் அமையாமல் எல்லையின்மை யை எண்ண வந்தது. அளவிடலரியவன் அளவாப் கின்ருன். பல்லாயிரம் கைகளையுடைய திருமாலே இருகைகளோடு இராமனப் ஈங்கு வந்துள்ளான்; ஆகவே புதுமையான அங்க இரண்டு கைகள் பழமையான அனந்த கோடிகைகள் செய்யும் அதிசய வேலையைச் செய்தது என்று துதிசெய்து கின்ருர். இராமனை இங்கே அமலன் என்றது நிலைமை நீர்மை கலை மைகளைக் கருதியுணர வந்தது. மலம்= அழுக்கு. அது இல்லாத வன் அமலன் என்க. மலாகிதன் எனக் கடவுளேக் குறித்து வட மொழியாளர் வழங்கிவருவது ஈண்டு உணர்ந்துகொள்ளவுரியது. பரம பரிசுக்கன் என இறைவனைச் சுட்டி வரும் பெயரை இங்கே இராமனுக்கு இட்டிருக்கிருர், பலகோடி அரக்கர்களைக் கொலை செய்து வருகிறவனே அமலன் என்று குறித்தது நிலைமை களை நேரே ஒர்க்க கூர்மையாப் ஆய்ந்து கொள்ள வங்தது. பாபக் குப்பைகளை அழித்து ஒழித்துப் பரிசுக்க வாழ்வுகள் உலகில் தழைத்து வர உழைத்து வருகிருன் ஆதலால் அந்த மையும் உண்மையும் தெரிய அருமைப் பெயர் மருமமாய் மருவி கின்றது. புண்ணியங்கள் யாண்டும் தலையெடுத்து வரும்படி பாவிகளை ஈண்டு அழிக்கின்ருன்; அவ்வாறு அழிப்பவன் புண் னிய மூர்த்தியே என்பதை எண்ணியுணரப் புனித நாமம் இனி தே கண்ணி வங்கது. தாயவனது மாய நிலை நேயமாய் நின்றது. ஆயிரம் கைகளையுடைய அக்க அமலனே மாயிரு ஞாலம் உய்ய இரண்டு கைகளே புடையனப் ஈண்டு வந்திருக்கிருன்; ஆயினும் அவன் செய்ய முடியா:கதை இவன் செய்து வருகிருன். அங்க ஆதி மூலப் பெருமானுக்கு இராவணன் அஞ்ச வில்லை; அவனை எளிதாகவே எண்ணி இகழ்ந்து வந்தான். ஆழி யான் ஆழியான் எனக் கேலி செய்வது இலங்கை வேந்தன் வழக்கம். சக்கர பாணியான திருமால் நிருகர்பதியின் உக்கிர