பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5216 கம்பன் கலை நிலை - செய்துள்ளது. இவ் வுண்மையை நுண்மையா உணர்ந்து உறுதி நலம் தெளியப் புனித வாளி என இனிது வாழ்த்தினர். முக்கோடி வாழ்நாள் என்றது நீண்ட காலமாக அவன் வாழ்ந்து வந்துள்ள நிலைமை தெரிய வந்தது அற்ப ஆயுளாய் அவன் அழியவில்லை; கற்ப கோடி காலம் அம்புத நிலையில் உயர்ந்து வாழ்ந்து வந்தவன் முடிவில் சிறந்த விர மரணத்தை அடைந்திருக்கிருன். அவனது வாழ்வின் அளவு காண வந்தது. எண்ணின்றி முக்கோடி வாணுளது உடையானேப் புண் ஒன்றப் பொருதுஅழித்தான் புள்ளிருக்கு வேளுரே (தேவாரம்) இராவணன் முக்கோடி வாழ்நாள் உடையவன் என்பதைத் திருஞானசம்பந்தர் இங்கனம் குறித்திருக்கிருர். ஆயுள் பலம் தேக பலம் மனுேபலம் அறிவு பலம் அரசு பலம் முதலியவை களோடு அரிய பல வரபலங்களும் உடையவன் இங்கே அழிந்து விழுந்துளான். மேலான நிலைமைகள் யாவும் விழிதெரியகின்றன. பாணம் மார்பை ஊடுருவிப் போகவே இராவணன் நிலை குலைந்து தேரிலிருந்து கீழே சாய்ந்தான். அவனுடைய திரு மேனியில் மருவியிருந்த அரிய மணியணிகள் யாவும் சிதறி விழுக்தன. எவ்வழியும் அவை ஒளிகளை வெளியே வீசிவிளங்கின. உயிரைப் பருகிப் போன வாளி பாற்கடலில் நீராடி மீண்டு வந்து இராமன் முதுகில் மருவியிருந்த அம்புப்புட்டிலே அடைந்து கின்றது.(ப்ார்வைக்கு ஒரு போர்க் கருவிபோல் அது உருவமாய் இருந்தாலும் அதிசயமான தெய்வீக சக்தி யுடையது; இராமன் கருதியபடியெல்லாம் காரியம் புரிந்து வருவது; போர் மேல் ஏவிய கணையை மீளவும் தன் பால் வரும்படி செய்ய வல்ல மந்திரமுறையை இராமன் மருவியிருந்தள்ளமை இங்கே தெரிய வந்தது. அம்புக விரன் நிலை அதிசய வியப்பா யுள்ளது. அணு குண்டின் அவதி. இக்காலத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள அணுகுண்டை வெளியே விசினல் அது கொடிய அழிவுகளையே செய்யும்; அதனை யாரும் அடக்கி ஆளமுடியாது; கன்னைப் படைத்தவனே பும் அடியோடு அழித்து எவ்வழியும் அது கெடுத்து விடும்.