இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
*120 புல்லின் இதழ்கள்
சம்மதத்தின் சாயலாக வசந்தி தலையை ஆட்டினாள். மகிழ்ச்சியினால் அவள் முகம் மலர்ந்தது. அதைக் கண்டு சுந்தரியின் உள்ளமும் குளிர்ந்தது. ஆனால் பாகவதரின் உள்ளமோ கண நேரத்துக்குள் கருமேகங்களால் சூழப்பட்ட வானம் போல் இருண்டுவிட்டது. அந்த இருளில் மூழ்கிப் போன தம்முடைய கொள்கையையும், அதை ஊட்டி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருத்த ஹரியையும் திக்குத்திசை தெரியாமல் தேடிக் கொண்டிருந்
5 /.
பிள்ளையவர்கள் சிரித்தபடியே ஊருக்குப் புறப் பட்டார்.